வீட்டைக் கட்டிப் பார் என்பார்கள். ஆனால் இப்போதெல்லாம் வீட்டை கட்டுவது மலைப்பாக இருப்பதால் பலரும் கட்டிய வீட்டை வாங்குவதில் ஆர்வம் காட்டுகின்றனர். அவ்வாறு கட்டிய வீட்டை வாங்குவதற்கு முன்னர் சில வாஸ்து சாஸ்திரத்தை பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்துகின்றனர் நிபுணர்கள். வீடு என்பது பலருக்கும் வாழ்நாள் முதலீடு. அப்படியிருக்க அதனை நேர்த்தியாக கவனத்துடன் தேர்ந்தெடுத்து வாங்குவது மனதுக்கு உற்சாகம் தரும் வாழ்க்கைக்கு வளம் தரும் என்று கூறுகின்றனர்.


வீடு வாங்குவதற்கு முன் கருத்தில் கொள்ள வேண்டியவை:


1. நீங்கள் ஆசிரியராக இருந்தால் கிழக்கு முகம் பார்த்த ஈடு வாங்குங்கள். வங்கி, நிதித் துறையில் வேலை செய்தால் வடகிழக்கு அல்லது வடக்கு நோக்கிய வீடு வாங்குங்கள். அது குபேரஸ்தானமாகக் கருதப்படுகிறது.


2. நிலத்தின் வடிவமும் மிகவும் முக்கியமானது. வாஸ்து கடவுளின் தலை வடகிழக்கிலும் கால் தென்மேற்கிலும் இருக்கும். அதனால் வீடு வாங்குவதற்கு முன்னர் அனைத்து திசைகளையும் ஆராய்வது அவசியம். ப்ளாட்டின் வடிவம் சதுரமாகவோ அல்லது செவ்வகமாகவோ தான் இருக்க வேண்டும். அதில் ஏதும் நீட்டிப்பு இருக்கக் கூடாது. ப்ளாட்டின் அளவு 1:3 என்றளவில் இருக்க வேண்டும்.


3. வீட்டைச் சுற்றி 100 அடியில் கோயில் இருக்கக் கூடாது. வடக்கு அல்லது கிழக்கு பக்கமாக காலி இடமாக இருந்தால் அதில் ஆறோ, குளமோ அல்லது தண்ணீர் தொட்டியோ இருந்தால் நல்லது. வீட்டின் தெற்கிலும் வடக்கிலும் வேறு கட்டிடங்கள் இருந்தால் அது மிகவும் நல்லது.


4. ப்ளாட்டை சுற்றி சுடுகாடு அல்லது இடுகாடு இருக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். வீட்டின் முன்னால் மின்சார கம்பி இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.


5. மனையின் மண்வளம் வாஸ்துவிற்கு ரொம்பவும் முக்கியம். மணலின் வாசனை மற்றும் நிறத்தைப் பாருங்கள். மணலை தோண்டும்போது எலும்போ ஆணியோ கிடைத்தால் அந்த இடத்தை சுத்தமான மணல் கொண்டு நிரப்புங்கள். நிலத்திற்கு பூமி பூஜை செய்வது மிகவும் அவசியம். வாஸ்து பூஜை செய்வதால் மனைக்கு நேர்மறை சக்தி கிட்டும்.


6. வடகிழக்கில் சாய்தளம் இருக்கும் வீடுகள், மனைகள் அதிர்ஷ்டமானவை.  


7. வடக்கு, கிழக்கு பகுதிகளில் அதிக கதவுகள் மற்றும் ஜன்னல்கள் அமைய வேண்டும். வீடு கட்டும் போது தெற்கு, மேற்கு, தென்மேற்கு ஆகிய திசைகளில் கட்டிடங்கள் உயர்ந்தும், வடக்கு, கிழக்கு, வடகிழக்குப் பகுதியில் சற்று தாழ்ந்தும் இருக்க வேண்டும். தெற்கு அல்லது மேற்கு பகுதியில் அலமாரிகள் அமைவது நல்லது.


8. வாஸ்து சாஸ்திரத்தில் வடிவங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன, மேலும் வீட்டில் உள்ள அனைத்து அறைகளும் சதுரம் அல்லது செவ்வகமாக இருப்பது முக்கியம். அறுகோணம் அல்லது எல் வடிவ அறை போன்ற ஒழுங்கற்ற வடிவங்கள் மங்களகரமானதாகக் கருதப்படுகிறது. ஒரு செவ்வக அறையின் நீளம் அகலத்தை விட இரண்டு மடங்கு அதிகமாக இருக்கக்கூடாது என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். ஒழுங்கற்ற வடிவிலான நிலத்தில் கட்டப்பட்ட வீடு அல்லது வீட்டின் ஒற்றை அறை கூட ஒற்றைப்படை வடிவத்தில் இருந்தால் அது வாஸ்து தோஷத்திற்கு வழிவகுக்கும், அதை சரிசெய்ய வேண்டும்.