காவேரி மருத்துவமனையில், உடல்நலக் குறைவால் அனுமதிக்கப்பட்ட ரஜினிகாந்தின் நலம் விசாரிக்க, மருத்துவமனை நிறுவனர் அரவிந்தனை தொடர்புகொண்டதாகவும், அவர் நாளுக்கு நாள் நலம்பெறும் தகவல் தனக்கு நிம்மதியளித்துள்ளதாகவும் வைரமுத்து ட்வீட் செய்திருக்கிறார்.





உடல்நலம்பெற்று மீண்டும் நலமுடன் ரஜினி இல்லம் திரும்பவேண்டும் என வாழ்த்தி, ”காவேரி மருத்துவமனை நிறுவனர் டாக்டர் அரவிந்தனிடம் திரு ரஜினியின் நலம் கேட்டேன். நாளுக்கு நாள் அவர் நலம் கூடிவரும் நம்பிக்கைத் தகவல்கள் என் நிம்மதியை மீட்டெடுத்தன. உத்தமக் கலைஞனே. காற்றாய் மீண்டு வா. கலைவெளியை ஆண்டு வா. படையப்பா எழுந்து வா. பாட்ஷாபோல் நடந்து வா. வாழ்த்துகிறேன்” என பதிவிட்டுள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் படிக்க: