அரசியல் நெருக்கடியின் காரணமாக உத்தரகாண்ட் மாநில முதல்வர் தீரத் சிங் ராவ் ராஜினாமா செய்ததையடுத்து அடுத்த முதல்வர் யார்? என்பது குறித்து சட்டமன்ற உறுப்பினர்களின் ஆலோசனைக்கூட்டம் உத்தரகாண்டில் இன்று மத்திய வேளாண் மற்றும் விவசாய நலன்துறை அமைச்சர்  நரேந்திர சிங் தோமர் மேற்பார்வையில் நடைபெறுகிறது.


உத்தரகாண்ட் மாநிலத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத்தேர்தலில் பாஜக வெற்றி பெற்ற நிலையில், முதல்வராக திரிவேந்திர சிங் ராவத் முதல்வராக பதவி ஏற்றார். ஆனால் இவரது செயல்பாட்டில் திருப்தி இல்லை என கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்பட பலர் அதிப்திகளை கட்சி மேலிடத்திற்கு தெரிவித்து வந்தனர். இதனையடுத்து அகில இந்திய பாரதிய ஜனதா கட்சியின் தலைமை, முதல்வர் திரிவேந்திர சிங் ராவத்தை பதவி விலகச் செய்தது. அதற்குப்பதிலாக 2021 மார்ச் மாதம் அதாவது 4 மாதத்திற்கு முன்பு தான் மாநிலத்தின் புதிய முதல்வராக தீரத் சிங் ராவ் பதிவேற்றுக்கொண்டார். இவர் உத்தரகாண்டில் மாநிலத்தில் மக்களவை உறுப்பினராக இருந்தவர். ஆனால் மக்கள் பிரதிநிதித்துவச்சட்டத்தின் படி, சட்டமன்ற உறுப்பினர் இல்லாத ஒருவர், முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டால் 6 மாதத்தில் ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிட்டு அவர் வெற்றி பெற வேண்டும். இல்லாவிடில் அது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராகதான அமையும்.





ஆனால் எந்தவொரு தொகுதியிலும் தீரத் சிங் ராவ் போட்டியிடுவதற்கான சூழல் இல்லாத நிலை  தற்போது ஏற்பட்டு விட்டது. ஏனென்றால் சட்டசபையின் பதவிக்காலம் முடிவடைய ஒராண்டு காலம் தான் உள்ளது எனில் சட்டப்படி, அங்கு இடைத்தேர்தல் நடத்த முடியாது. இதுபோல தான் தற்போது உத்தரகாண்டின் நிலைமை உள்ளது. குறிப்பாக உத்தரக்காண்ட மாநில சட்டசபையின் பதவிக்காலம் 2022 ஆம் ஆண்டோடு முடிவடையவுள்ள நிலையில் சட்டப்படி இங்கு இடைத்தேர்தல் நடத்தவாய்ப்பில்லை. அதிலும் கொரோனா காலம் என்பதால் எந்த தேர்தலையும் நடத்துவதற்கு தேர்தல் ஆணையம் முன்வரவில்லை. எனவே தான் கடந்த சில நாட்களாகவே மாநில கட்சியினரிடையே தற்போதைய முதல்வராகவுள்ள  தீரத் சிங் ராவ்விற்கு எதிராக பல்வேறு எதிர்ப்புகள் எழுந்து வந்தது. இதனையடுத்து கட்சியின் உயர் மட்டக்குழு அவரை டெல்லிக்கு அழைந்திருந்த நிலையில் தான், பிரச்சனைக்குறித்து பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டாவை சந்தித்து பேசியுள்ளார். இதன் பின்னர் தான்,  அரசியல் நெருக்கடியின் காரணமாக முதல்வராக பதவியேற்ற 4 மாதங்களிலேய தீரத் சிங் ராவ் தீடிரென அவரது ராஜினாமா கடிதத்தினை டேராடூனில் உள்ள ஆளுநர் பேபி ராணி மௌரியாவை சந்தித்து வழங்கினார்..





இதனையடுத்து உத்தரகாண்டில் இன்று மத்திய வேளாண் மற்றும் விவசாய நலன்துறை அமைச்சர்  நரேந்திர சிங் தோமர் மேற்பார்வையின் கீழ், பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறுகிறது. இதில் முதல்வர் பதவியிலிருந்து விலகிய தீரர் சிங் ராவ்விற்கு அடுத்தப்படியாக யார் அடுத்த முதல்வர் என்பது குறித்த கூட்டத்தில் விவாதிக்கப்படவுள்ளது. இந்நிலையில் தற்பொழுது எம்.எல்.ஏவாக இருக்கும் ஒருவர் மட்டுமே இந்த முறை தேர்வு செய்யப்படுவார் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.