துனிஷா சர்மா மரணத்திற்கு காரணமான கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணை அமைச்சர் ராம்தாஸ் வலியுறுத்தி உள்ளார். 


மகாராஷ்டிராவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்தார் சீரியல் நடிகை துனிஷா சர்மா. இவருடைய மரணத்திற்கு சக நடிகரான சீசன் முகமத்து காரணம் என்று கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், துனிஷாவை ஏமாற்றிய சீசன் முகமதுவிற்கு கடுமையான தண்டணை வழங்கப்பட வேண்டும் என்று இணை அமைச்சர் தெரிவித்துள்ளார்.


இணை அமைச்சர் துனிஷாவின் தாயார் வீட்டிற்குச் சென்று அவரைச் சந்தித்தார் 


இது தொடர்பாக அவர் கூறுகையில், ”துனிஷாவின் தாயாரைச் சந்தித்து ஆறுதல் தெரிவித்தேன்.. அவர் மகளின் மரணத்திற்கு நீதி கிடைக்கும் வேண்டும் என்று என்னிடம் தெரிவித்தார். நிச்சயம் அவருக்கு நீதி கிடைக்கும் என்பதை நாம் உறுதி செய்ய வேண்டும்.” என்று தெரிவித்தார்.


துணை முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ்- ஐ சந்திக்க இருப்பதாகவும், அவரிடம் துனிஷா குடும்பத்திற்கு 25 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்க இருப்பதாக தெரிவித்தார். 


தனது கட்சியின் நிதியில் இருந்து ரூ.3 லட்சம் அளிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், துனிஷா குடும்பத்தில் வருவாய் ஈட்டுபவராக துனிஷா மட்டுமே இருந்துள்ளார். தற்போது அவரின் தாய் என்ன செய்யப்போகிறார் என்பது தெரியவில்லை.