National Headlines July 20: 


Parliment Monsoon Session: பரபரப்பான அரசியல் சூழல்.. இன்று தொடங்கும் நாடாளுமன்ற கூட்டத்தொடர்.. நிறைவேற்றப்படும் மசோதாக்கள் என்னென்ன?


பரபரப்பான அரசியல் சூழலில் இன்று தொடங்குகிறது நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர். வழக்கமாக நாடாளுமன்ற கூட்டம் ஆண்டுக்கு மூன்று முறை நடக்கும். பட்ஜெட் கூட்டத்தொடர், மழைக்கால கூட்டத்ட்தொடர், குளிர்கால கூட்டத்தொடர். அந்த வகையில் பட்ஜெட் நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஏற்கனவே நடைபெற்று முடிந்தது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 20ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 11ஆம் தேதி நிறைவடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க https://tamil.abplive.com/news/india/the-monsoon-session-of-parliament-which-begins-today-at-the-new-parliament-complex-will-continue-till-august-11-129930/amp


அவசரமாக தரையிறங்கியது சோனியா காந்தி பயணித்த விமானம்.. நடந்தது என்ன?


ராகுல் காந்தி சென்ற விமானம், சிறு தொழில்நுட்ப தேக்கத்தின் காரணமாக அவசரமாக போபாலில் தரையிறங்கிய போது, விமானத்தில் சோனியா காந்தி ஆக்சிஜன் மாஸ்க் அணிந்திருந்த புகைப்படத்தை ராகுல்காந்தி பகிர்ந்துள்ளார்.  2024-ஆம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்தும் பணியில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் ஒன்றிணைந்துள்ளன. அதன் ஒரு பகுதியாக கடந்த மாதம் 23-ஆம் தேதி பாட்னாவில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மேலும் படிக்க https://tamil.abplive.com/news/rahul-gandhi-picture-of-soniya-gandhi-wearing-oxygen-mask-129907/amp


Adani Criticised Hindenburg Report : ’எங்கள் நற்பெயரை கெடுக்கவே வெளியிடப்பட்டது ஹிண்டன்பர்க் அறிக்கை ..’ கடுமையாக சாடிய கௌதம் அதானி!


அதானி குழுமத்தின் வளர்ச்சி சிலருக்கு பிடிக்காமல் இருப்பதாலும் அதானி குழுமத்தின் நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பதற்காகவே ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியிடப்பட்டதாக அக்குழுமத்தின் தலைவர் கவுதம் அதானி பேசியுள்ளார். முன்னதாக கடந்த ஜனவரி 27 அன்று, ஹிண்டன்பர்க் ரிசர்ச் தனது அறிக்கையில் கணக்கு மோசடி மற்றும் பங்குச் சூழ்ச்சி செய்ததாக அதானி குழுமம் மீது  குற்றம் சாட்டியது.  மேலும் படிக்க https://tamil.abplive.com/news/india/gautum-adani-once-again-criticised-the-hindenburg-report-at-their-31st-annual-general-meeting-129913/amp


Senthil Balaji Case: மேல் முறையீட்டு மனுவை அவசரமாக விசாரிங்க.. செந்தில் பாலாஜி வழக்கறிஞர்கள் இன்று உச்சநீதிமன்றத்தில் முறையிட திட்டம்!





அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் ஜூன் மாதம் 13ஆம் தேதி காலை 8 மணிக்கு அமலாக்கத்துறை சோதனை செய்தது. 17 மணி நேர சோதனைக்குப் பின்னர் அமலாக்கத்துறை அவரை விசாரணைக்கு அழைத்துச் சென்றது. அப்போது அவருக்கு நெஞ்சுவலி ஏற்படவே, உடனே ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில், செந்தில் பாலாஜி ஓமந்துரார் அரசு மருத்துவமனையில் இருந்து, காவேரி மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டார்.  மேலும் படிக்க https://tamil.abplive.com/news/india/senthil-balaji-s-lawyers-are-going-to-appeal-today-that-the-appeal-petition-filed-by-him-should-be-heard-urgently-in-the-supreme-court-129935/amp

 

Watch Video : மது கோப்பையை கீழே வைத்த பிரதமர் மோடி.. பிரான்சில் மதுவை தவிர்த்த வீடியோ வைரல்

 

இரண்டு நாட்களுக்கு முன்பு பிரான்ஸ் நாட்டின் தேசிய தினம் கொண்டாடப்பட்டது. அதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க பிரதமர் மோடிக்கு பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் அழைப்பு விடுத்திருந்தார். அதனடிப்படையில் இரண்டு பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடியை அந்நாட்டு பிரதமர் எலிசபெத் போர்ன் விமான நிலையத்துக்கு வந்து வரவேற்றார். பின்னர், அந்நாட்டின் தேசிய தின கொண்டாட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார். மேலும் படிக்க https://tamil.abplive.com/news/india/pm-modi-raises-toast-at-dinner-with-french-prez-macron-then-puts-the-glass-aside-129910/amp