- ‘SIR‘ எனும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள், தமிழ்நாட்டில் வரும் 4-ம் தேதி தொடங்கப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில், அது குறித்து ஆலோசிக்க முதலமைச்சர் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றுவருகிறது.
- ‘SIR‘-க்கு எதிராக தமிழ்நாடு தனது எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டியது முக்கிய தேவையாக உள்ளதாக அனைத்து கட்சிக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேச்சு.
- ‘SIR‘ நடவடிக்கைக்கு எதிராக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தவெக பங்கேற்கவில்லை. அரசு சார்பாக அல்லாமல், திமுக சார்பாக கூட்டப்பட்டுள்ளதால் புறக்கணிப்பு என தவெக விளக்கம்.
- தமிழ்நாடு காவல்துறையில் 59 டிஎஸ்பி-க்கள் பணியிடமாற்றம். நீலகிரி, விழுப்புரம், திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களின் அதிகாரிகளை மாற்றி பொறுப்பு டிஜிபி வெங்கட்ராமன் உத்தரவு.
- வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானதாக வானிலை மையம் அறிவிப்பு. தமிழ்நாட்டில் 7-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் தகவல்.
- சிஎம்எஸ் 03 செயற்கைக்கோளுடன் இன்று விண்ணில் பாய்கிறது எல்விஎம் 3 எம் 5 ராக்கெட். நாட்டின் தகவல் தொழில்நுட்ப சேவைகளை மேம்படுத்துவதற்கான இந்த செயற்கைக்கோள், ஸ்ரீஹரிக்கோட்டாவிலிருந்து மாலை 5.26 மணிக்கு விண்ணில் ஏவப்பட உள்ளது.
- கனடாவின் ஒன்டோரியோ மாகாணத்தில் அமெரிக்க வரிகளுக்கு எதிராக ஒளிபரப்பான சர்ச்சைக்குரிய விளம்பரத்திற்காக ட்ரம்ப்பிடம் மன்னிப்பு கோரினார் கனடா பிரதமர் மார்க் கார்னே.
- நடப்பாண்டு இறுதிக்குள் பறக்கும் காரை அறிமுகம் செய்து டெமோ காட்ட உள்ளதாக டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் அறிவிப்பு. அந்த நிகழ்ச்சி வரலாற்றில் மறக்க முடியாத நிகழ்வாக இருக்கும் என உறுதி.
- இங்கிலாந்தில் ஓடும் ரயிலில் கத்திக்குத்து தாக்குதல் நடத்திய மர்ம நபர்களால் பரபரப்பு. தாக்குதலில் படுகாயமடைந்த 10 பேரில் 9 பேர் கவலைக்கிடமாக உள்ளதாக தகவல்.
- மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இன்று தென்னாப்பிரிக்க அணியுடன் மோதும் இந்திய மகளிர் அணி கோப்பையை வெல்லும் என ரசிகர்கள் எதிர்பார்ப்பு.
- சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக நியூசிலாந்து அணியின் பிரபல கிரிக்கெட் வீரர் கேன் வில்லியம்சன் அறிவிப்பு.