தமிழ்நாடு:



  • துபாய் எக்ஸ்போவில் தமிழ்நாடு அரங்கை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார்

  • ஐக்கிய அரபு நாடு அமைச்சர்களுடன் முதலமைச்சர் ஸ்டாலின் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார் 

  • அரசு பேருந்துகள் நிறுத்தும் சாலையோர உணவகங்களில் சைவ உணவுகள் மட்டும் தயாரிக்கப்பட வேண்டும் என்ற நிபந்தனை நீக்கப்பட்டுள்ளது 

  • அடுத்த 24 மணி நேரத்தில் நீலகரி, கோயமுத்தூர், திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

  • மார்ச் 28,29-ம் தேதிகளில் அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்தால் சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என தலைமைச் செயலாளர் இறையன்பு எச்சரிக்கை 


இந்தியா:



  • இந்திய சீன எல்லையான லடாக் பகுதிகளில் சீன படைகளை முற்றிலுமாக விலக்கிக் கொள்ள வேண்டும் என சீன அமைச்சர்களிடம் இந்திய அதிகாரிகள் பேச்சுவார்த்தை

  • வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்கவும், வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் ஆன்லைன் மூலம் வாக்களிக்கவும் பரிசீலனை மேற்கொள்ளப்படும் என மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ தகவல்

  • காங்கிரஸ் பொது செயலாளர்கள், மாநில பொறுப்பாளர்களுடன் சோனியா காந்தி இன்று ஆலோசனை மேற்கொள்ள இருக்கிறார்


உலகம்:



  • உலகின் உயர்ந்த கட்டடமான புர்ஜ் கலிஃபாவில் தமிழ் பாடல் செம்மொழியான தமிழ் மொழியா இசைக்கப்பட்டது

  • ரஷ்யாவில் இராணுவ நடவடிக்கைகள் குறித்து பொய் செய்திகள் பரப்புபவர்களுக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை என அந்நாட்டு அரசு அறிவித்திருக்கிறது

  • உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா நடத்தி வரும் தாக்குதலால், இதுவரை 1,300 உக்ரைன் வீரர்கள் உயிரிழந்துள்ளனர்

  • சவுதி அரேபியாவின் கச்சா எண்ணெய் கிடங்குகள் மீது ஹவுதி அமைப்பு மேற்கொண்ட தாக்குதலால் தீ பரவியது


விளையாட்டு:



  •  2022 ஐபிஎல் தொடர் மும்பை வான்கடே மைதானத்தில் இன்று ஆரம்பமாகிறது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகின்றன




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண