தமிழ்நாடு:



  • தமிழ்நாட்டில் மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது.

  • சென்னையில் இன்று பெட்ரோல் விலை 76 காசுகள் அதிகரித்து ரூபாய் 108.21 ரூபாய்க்கும், டீசல் விலை 76 காசுகள் அதிகரித்து ரூபாய் 98.21 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

  • டெல்லியில் நேற்று மத்திய நிதியமைச்சரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்தார்.

  • தூத்துக்குடி முத்துநகர் ரயலில் முன்பதிவு இல்லாத பெட்டி சேவை மீண்டும் தொடக்கம். 

  • நெல்லை,குமரி மாவட்டத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல்.

  • தஞ்சாவூர் பெரிய கோயிலில் சித்திரை திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு அங்கு வரும் ஏப்ரல் 13ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 


இந்தியா:



  • சர்வதேச பிரச்னைகளில் நேர்மையான அணுகுமுறை என்ற நிலைப்பாட்டில் இந்தியா இருந்தால் மத்தியஸ்தம் செய்வதற்கு இந்தியா ஒத்துழைப்பு வழங்கலாம் என்று ரஷ்ய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

  • ஐஐடி-ஜேஇஇ தேர்வுகளுக்கான விண்ணப்பிக்கும் தேதி வரும் ஏப்ரல் 5ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

  • மார்ச் மாதத்தில் ஜிஎஸ்டி வரி வருவாய் 1,42,095 கோடி ரூபாயாக பதிவாகியுள்ளது. இதுவரை இல்லாத அளவு மிகவும் அதிகமான வருவாய் இதுவாகும்.

  • மகாராஷ்டிராவில் இயற்கை எரிவாயு மீதான கூட்டு வரியை மாநில அரசு 13.5%யில் இருந்து 3% குறைத்துள்ளது. 

  • பாஜக ஆட்சியில் கடந்த 7 ஆண்டுகளில் 3 கோடி பேருக்கு மேல் வீடுகள் கட்டி தரப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தகவல்.

  • டெல்லியில் வரும் ஏப்ரல் 5ஆம் தேதி காங்கிரஸ் கட்சியின் எம்பிக்கள் கூட்டம் நடைபெறுகிறது.


உலகம்:



  • உக்ரைன் -ரஷ்யா பிரச்னைக்கு உடனே தீர்வு காண வேண்டும் என்று பிரதமர் மோடி ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு வேண்டுகோள்.

  • இலங்கையில் அவசரநிலையை பிரகடனம் செய்து அந்நாட்டு அதிபர் கோத்தபய ராஜபக்‌ஷ உத்தரவு.

  • இந்திய குடியரசுத்துறை தலைவர் ராம்நாத் கோவிந்த் அரசுமுறை பயணமாக 3 நாட்கள் துருக்மேனிஸ்தான் சென்றார்.

  • ஐரோப்பிய நாடுகளில் வெள்ளை பணி கொட்டி வருகிறது.

  • தென்கொரியா நாட்டின் இரு பயிற்சி விமானங்கள் மோதி கொண்டன். விபத்தில் 4 பேர் உயிரிழப்பு


விளையாட்டு:



  • ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

  • ஐபிஎல் தொடரில் இன்று 2 ஆட்டங்கள் நடைபெற உள்ளன. முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்த்து விளையாடுகிறது.

  • இரண்டாவது போட்டியில் குஜராத் டைட்ன்ஸ் அணி டெல்லி அணியை எதிர்த்து விளையாடுகிறது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண