தமிழ்நாடு:



  • தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு 267 கோடி ரூபாய் நிதியை மத்திய நிதி அமைச்சக்கம்  விடுவித்துள்ளது.

  • உக்ரைனில் இருக்கும் தமிழ்நாட்டு மாணவர்களை மீட்க தமிழ அரசு சார்பில் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.

  • நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டவர்கள் 30 நாட்களில் தேர்தல் செலவு கணக்கை தாக்கல் செய்யாதவர்கள் 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்படும் என்று மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

  • முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் ஜாமீன் மனு தள்ளுப்படி செய்து நீதிமன்றம் உத்தரவு.

  • தென்மேற்கு அந்தமானில் வருகிற 28ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மையம் உருவாக வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல்.


இந்தியா:



  • கிரிப்டோ கரன்சி மீதான நிலைப்பாட்டை மத்திய அரசு தெளிவுப்படுத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. 

  • உக்ரைனில் இருக்கும் இந்தியர்களை பாதுகாப்பாக மீட்க பிரதமர் மோடி தலைமையில் இன்று ஆலோசனை நடைபெறுகிறது. 

  • உக்ரைனிலுள்ள இந்தியர்களை மீட்க இன்று இரண்டு இந்திய விமானங்கள் செல்ல உள்ளது.

  • இந்திய வெளியுறவுத்துறை ஜெய்சங்கர் உக்ரைன் வெளியுறவுத் துறை அமைச்சரிடன் ஆலோசனை.

  • உத்தரப்பிரதேசத்தில் நாளை 5ஆம் கட்டத் தேர்தல் நடைபெறுகிறது. 

  • ராஜஸ்தானில் ஆழ்துலை கிணற்றில் விழுந்த சிறுவன் 24 மணி நேர போராட்டத்திற்கு பிறகு மீட்பு.


உலகம்:



  • உக்ரைன் விவகாரம் தொடர்பாக அமெரிக்கா மற்றும் உக்ரைன் அதிபர்கள் ஆலோசனை நடத்தினர். 

  • ரஷ்ய அதிபர் புதினின் சொத்துகளை முடக்க ஐரோப்பிய யூனியன் முடிவு எடுத்துள்ளது.

  • உக்ரைன் விவகாரம் தொடர்பாக சீன அதிபர் மற்றும் ரஷ்ய அதிபர்கள் ஆலோசனை நடத்தின. 

  • இங்கிலாந்து விமானங்களுக்கு ரஷ்ய அரசு தடை விதித்துள்ளது. 

  • உக்ரைன் போரில் 1000 ரஷ்ய வீரர்கள் பலியாகியுள்ளதாக தகவல்.


விளையாட்டு:



  • இந்தியா-இலங்கை அணிகள் இடையேயான இரண்டாவது டி20 போட்டி இன்று தர்மசாலாவில் நடைபெற உள்ளது. 

  • புரோ கபடி லீக் தொடரில் டபாங் டெல்லி அணி பாட்னா ப்ரைட்ஸ் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண