• தமிழகத்திற்கான ஒதுக்கீடாக 2 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் நேற்று தமிழகம் வந்தது – இன்று முதல் மீண்டும் தடுப்பூசிகள் செலுத்த திட்டம்.

  • நீட் தேர்வு அறிக்கை சமர்ப்பிக்க தேவைப்பட்டால் கால அவகாசம் – ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தகவல்.

  • இந்தியா முழுவதுமாக 32.36 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது – தடுப்பூசி செலுத்துவதில் அமெரிக்காவை பின்னுக்கு தள்ளியது இந்தியா.

  • ஜம்மு, காஷ்மீர்,லடாக்கை தனி நாடாக சித்தரித்து வரைபடம் வெளியீடு – டுவிட்டர் நிறுவனம் மீது உத்தரபிரதேசத்தில் வழக்குப்பதிவு

  • .இந்தியாவில் 12 மாநிலங்களில் டெல்டா பிளஸ் வைரஸ் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

  • இந்தியாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 46 ஆயிரமாக குறைவு.

  • நாடு முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 979 ஆக சரிவு.

  • தமிழ்நாட்டில் கொரோனா தினசரி பாதிப்பு நேற்று 4 ஆயிரத்து 804 ஆக பதிவு.

  • மாநிலம் முழுவதும் நேற்று 6 ஆயிரத்து 553 நபர்கள் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

  • தமிழ்நாட்டில் நேற்று கொரோனா வைரசால் 98 பேர் உயிரிழந்துள்ளனர்.

  • ரயில்வே துறை நாடு முழுவதும் 35 ஆயிரம் டன் ஆக்சிஜனை ரயில்கள் மூலம் விநியோகம் செய்துள்ளது.

  • கருப்பு பூஞ்சை நோயால் நாடு முழுவதும் 40 ஆயிரம் பேர் பாதிப்பு – மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன்

  • கொரோனா வைரசின் இரண்டாவது அலை இன்னும் முடியவில்லை – மகாராஷ்ட்ரா முதல்வர் உத்தவ் தாக்கரே எச்சரிக்கை.

  • கூடங்குளத்தில் மேலும் இரு அணு உலைகள் அமைக்கும் பணி தீவிரம்- 5 மற்றும் 6வது அணு உலைக்கான கட்டுமான பணிகள் இன்று தொடக்கம்

  • கொரோனாவால் வீழ்ந்த நாட்டின் பொருளாதாரத்தை சீரமைக்க ரூபாய் 6.28 லட்சம் கோடியில் புதிய திட்டம் – மத்திய அரசு முடிவு

  • கொரோனா பாதிப்பில் இருந்து மீள்வதற்காக சுகாதாரத்துறைக்கு ரூபாய் 50 ஆயிரம் கோடி செலவிட முடிவு – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் திட்டம்

  • குழந்தைகளுக்கான சுகாதார வசதிகளை வலுப்படுத்துவதில் சிறப்பு கவனம் – பிரதமர் மோடி

  • தமிழகத்திற்கு அளிக்கப்படும் தடுப்பூசிகளை அதிகரிக்க வேண்டும் – மத்திய சுகாதாரத்துறை அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

  • கோவில்களில் பணியாற்றும் தொகுப்பூதிய பணியாளர்களை நிரந்தரமாக்க வேண்டும் – தமிழக அரசுக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்

  • 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் முன்பே மாணவர் சேர்க்கை நடத்தக்கூடாது – தனியார் கல்லூரிகளுக்கு அமைச்சர் பொன்முடி எச்சரிக்கை

  • தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் வரும் ஜூலை 31-க்கு பிறகே மாணவர் சேர்க்கை நடத்தப்படும் – அமைச்சர் பொன்முடி

  • தமிழ்நாட்டில் வரும் 5 நாட்களுக்கு மழை பெய்யக்கூடும் – சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

  • போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட சிவசங்கர் பாபாவிற்கு 3 நாள் போலீஸ் காவல் – நீதிமன்றம் உத்தரவு.

  • 9 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடத்த பூர்வாங்க பணிகள் தொடங்கப்பட்டுள்ளது – அமைச்சர் பெரியகருப்பண்

  • பாம்பன் தூக்குப் பாலத்தில் திடீர் பழுது – ரயில் போக்குவரத்து தற்காலிக நிறுத்தம் – மண்டபம் ரயில் நிலையத்தில் இருந்து ரயில்களை இயக்க ஏற்பாடு

  • களியக்காவினை எஸ்.ஐ. வில்சன் கொலை வழக்கு – விசாரணையை தீவிரப்படுத்திய தேசிய புலனாய்வு முகமை.