Headlines Today : உரிமம் இல்லாவிட்டால் இன்சூரன்ஸ் இல்லை... அடுத்த 5 நாட்களுக்கு மழை.. பதவி விலகிய சபாநாயகர்... இன்னும் பல!

கடந்த 24 மணி நேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச்செய்திகளாக கீழே காணலாம்.

Continues below advertisement

தமிழ்நாடு :

Continues below advertisement

  • விமர்சனம் என்ற பெயரில் தமிழக வளர்ச்சியை தடுக்க நினைத்தால் சும்மா இருக்க மாட்டேன் : முதலமைச்சர் முக ஸ்டாலின் எச்சரிக்கை
  • ஓட்டுநர் உரிமம் இல்லாவிட்டால் இன்சூரன்ஸ் வழங்கக்கூடாது : காப்பீடு நிறுவனங்களுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு 
  • பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு : அரசு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு 5 % ஊதிய உயர்வு அளிக்க ஒப்பந்தம் 
  • தமிழகத்தில் இன்று துவங்க இருந்த பொறியியல் கலந்தாய்வு ஒத்திவைப்பு : அமைச்சர் பொன்முடி தகவல்
  • இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க கோரி வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் முக ஸ்டாலின் கடிதம் 
  • தமிழ்நாட்டில் 18 மாவட்டங்களில் அடுத்த 5 நாட்களுக்கு கன மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
  • கொரோனா காலத்திற்குப் பின் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகளவு குறைந்துள்ளது : மகளிர் ஆணைய தலைவர் தகவல் 

இந்தியா : 

  • குழந்தைகளை தாக்கும் தக்காளி காய்ச்சல் : மாநில அரசுகள் தேவையான நடவடிக்கைகளை எடுக்க மத்திய அரசு அறிவுறுத்தல்
  • பீகார் சட்டபேரவை சபாநாயகர் வி.கே.சின்ஹா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
  • மருத்துவ பரிசோதனைக்காக வெளிநாடு செல்கிறார் சோனியா காந்தி : ராகுல் காந்தி  மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோரும் செல்கின்றனர்.
  • திருநங்கைகளுக்கான சுகாதார திட்டம் வழங்க புரிந்துணர்வு ஒப்பந்தம் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பில் கையெழுத்தானது.
  • ஜூலை மாதத்திற்கான தண்ணீர் நாயகர்கள் போட்டி : சென்னை பெண் உள்பட 6 பேருக்கு விருது அறிவிப்பு

உலகம் : 

  • உலகின் அதிநவீன ரோபோக்களில் ஒன்றான அமேக்கா, பல்வேறு முகபாவனைகளை வெளிப்படுத்தும் அப்கிரேட் செய்யப்பட்டுள்ளது.
  • ரசாயன தாக்குதல் மற்றும் டிரோன் தாக்குதல்களை எதிர்கொள்வதற்காக தென்கொரிய ராணுவத்தினர் ஒத்திகை
  • கள்ளக்குறிச்சி சிவன் கோயிலில் திருடப்பட்ட 6 உலோக சிலைகள் அமெரிக்காவில் கண்டுபிடிப்பு

விளையாட்டு : 

  • ஆசிய கோப்பைக்கான இந்திய அணிக்கு பயிற்சியாளராக வி.வி.எஸ். லட்சுமணன் நியமனம்
  • நியூசிலாந்து ஏ அணிக்கு எதிரான இந்திய ஏ அணி அறிவிப்பு : கேப்டனமாக பிரியங்க் பஞ்சல் நியமனம்

 

Continues below advertisement
Sponsored Links by Taboola