Just In

மீண்டும் மீண்டும் மா... தீவிரமடையும் கொரோனா.. செங்கல்பட்டில் ஒருவர் உயிரிழப்பு..

ஆபத்தில் மகன், நெஞ்சை தொற்றிய பயம், திடீரென வந்த இருட்டு - கணவனை காப்பாற்றாத மனைவியின் பக்தி

TN weather Reoprt: 5 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட், சென்னையில் கனமழை? வானிலை மையம் எச்சரிக்கை

பிரியாணி சாப்பிட ரெடியாகுங்க.. பக்ரீத் எப்போது? வெளியானது அறிவிப்பு

"பாகுபலிகள் இல்ல.. ரிஷிகள், முனிவர்களே காரணம்" நாடு உருவானது எப்படி.. கதை சொன்ன ஆளுநர் ரவி
”அரைவேக்காடு பழனிச்சாமி அமைதியாக தூங்குங்க..” ஈபிஎஸ்-சை வச்சு செய்த திமுக
Today Headlines | கனமழை எச்சரிக்கை.. கேரளாவில் அதிகரிக்கும் ஜிகா வைரஸ்.. இன்னும் சில முக்கியச் செய்திகள்!
கடந்த 24 மணிநேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக கீழே காணலாம்.
Continues below advertisement

தலைப்புச்செய்திகள்
- கொரோனா இரண்டாம் அலை பரவலுக்கு பிறகு நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நாளை கூடுகிறது.
- நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்குவதை முன்னிட்டு கூட்டத்தை சுமூகமாக நடத்துவது தொடர்பாக இன்று அனைத்துக்கட்சி கூட்டம் – பிரதமர் மோடி பங்கேற்பு
- உச்சநீதிமன்ற வழக்கு விசாரணைகள் விரைவில் நேரடி ஒளிபரப்பு – உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா பேச்சு
- 5 கோடி வழக்குகள் நிலுவையில் இருப்பதால் விரைந்து தீர்வு காண வலியுறுத்தல்
- கேரளாவில் ஏற்கனவே 30 பேருக்கு ஜிகா வைரஸ் உறுதி செய்யப்பட்ட நிலையில் தற்போது மேலும் 5 பேருக்கு ஜிகா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.
- கோவிஷீல்ட் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களுக்கு அனுமதி – பிரான்ஸ் அரசு அறிவிப்பு
- டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு ஜப்பான் புறப்பட்டது இந்திய அணி – மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் நேரில் சென்று வழியனுப்பி வைத்தார்
- சபரிமலை ஐயப்பன் கோவிலில் தினசரி 10 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி – கோயில் நிர்வாகம் முடிவு
- சபரிமலை ஐயப்பன் கோவிலில் சுவாமி தரிசனத்திற்கு இணையதளத்தில் முன்பதிவு செய்திருக்க வேண்டும் – கோயில் நிர்வாகம்
- கோவை, நீலகிரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட தமிழ்நாட்டின் 16 மாவட்டங்களில் கனமழை பெய்வதற்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
- சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று இரவு இடி, மின்னலுடன் கனமழை – வாகன ஓட்டிகள் மிகுந்த அவதி
- இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 38 ஆயிரத்து 79 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி – மத்திய அரசு
- நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 560 பேர் கொரோனாவால் உயிரிழப்பு – மத்திய அரசு தகவல்
- சித்து- அம்ரீந்தர் சிங் மோதல் : சமாதனப்படுத்த காங்கிரஸ் தலைமை பேச்சுவார்த்தை
- மும்பையில் கனமழை – ரயில் நிலைய தண்டவாளங்களில் ஆறுபோல் ஓடிய மழை நீர்
- உச்சநீதிமன்ற அறிவுறுத்தலை ஏற்றுக்கொண்டு நடப்பாண்டிற்கான கன்வர் யாத்திரை ரத்து – இந்து அமைப்புகள் அறிவிப்பு
- ஆப்கானிஸ்தான் தூதரின் மகள் பாகிஸ்தானில் கடத்தப்பட்டு சித்ரவதை – இந்திய அதிகாரிகள், குடும்பங்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்
- ஒடிசாவில் வரும் 26-ந் தேதி முதல் 10 மற்றும் 12ம் வகுப்புகள் தொடக்கம் – ஒடிசா அரசு அறிவிப்பு
- கர்நாடக முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதாக வெளியான தகவல் வதந்தி – எடியூரப்பா பேட்டி
- கர்நாடகாவில் வரும் 26-ந் தேதி பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்
- தமிழ்நாட்டில் பெண்கள் பாதுகாப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் – காவல்துறையினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்
- சென்னையில் ஞாயிற்றுக்கிழமைகளிலும் மெட்ரோ ரயில் சேவை நீட்டிப்பு
- தமிழ்நாட்டில் புதியதாக 2 ஆயிரத்த 205 பேருக்கு நேற்று கொரோனா பாதிப்பு உறுதி
- கடந்த 24 மணிநேரத்தில் தமிழகத்தில் 43 பேர் கொரோனாவால் உயிரிழப்பு
Continues below advertisement
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.