• மேகதாது அணை விவகாரம் தொடர்பாக மத்திய அரசிடம் கோரிக்கை மனு அளிக்க தமிழக அரசின் சார்பில் அனைத்துக்கட்சி குழு இன்று டெல்லி பயணம்

  • மேகதாதுவில் அணை கட்டக்கூடாது என்ற தீர்மானத்தை ஜல்சக்தி அமைச்சரிடம் நேரில் வழங்க முடிவு

  • சென்னையில் மெட்ரோ ரயில் திட்ட விரிவாக்கம் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுடன் ஆலோசனை

  • மத்திய சுகாதாரத்துறை அமைச்சருடன் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் இன்று சந்திப்பு – கூடுதல் தடுப்பூசிகள் வழங்க நேரில் வலியுறுத்தல்

  • மாஸ்டர் கார்டு நிறுவனத்தின் டெபிட், கிரெடிட் கார்டுகளை இந்தியாவில் வழங்கத் தடை – ரிசர்வ் வங்கி நடவடிக்கை

  • ஜம்மு – காஷ்மீர் புல்வாமாவில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

  • விண்கலத்தில் பயன்படுத்தப்படும் விகாஸ் என்ஜின் சோதனை வெற்றி – இஸ்ரோ தகவல்

  • ஆசிரியர் தகுதித்தேர்வு சான்றிதழ் ஆயுள் முழுக்கச் செல்லத்தக்கது என்று அறிவிக்க வேண்டும் – முதல்வருக்கு இ.பி.எஸ்., ஓ.பி.எஸ். கோரிக்கை

  • தமிழ்நாட்டில் புதியதாக 2 ஆயிரத்து 458 நபர்களுக்கு புதியதாக கொரோனா பாதிப்பு

  • தமிழ்நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 59 பேர் கொரோனா வைரசால் உயிரிழப்பு

  • சித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட இந்திய மருத்துவ முறைக்காக புதியதாக 6 மருத்துவ கல்லூரிகள்

  • ஜிகா வைரஸ் எதிரொலி : வெளிமாநிலங்களில் இருந்து நீலகிரி வர இ- பாஸ் கட்டாயம்

  • 12ம் வகுப்பு மதிப்பெண்கள் சரிபார்ப்பு பணிகள் நிறைவு – ஓரிரு நாட்களில் தேர்வு முடிவுகள் வெளியாக வாய்ப்பு

  • ஸ்கிம்மர் கருவி மூலம் ஏ.டி.எம். மோசடி – சென்னை அருகே 3 பேர் கைது

  • சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தை தாமே தூய்மை செய்வதாக தலைமை நீதிபதி அறிவிப்பு

  • கர்நாடக அரசின் மேகதாது அணை திட்டத்திற்கு புதுவை முதல்வர் ரங்கசாமி எதிர்ப்பு – பிரதமர், உள்துறை அமைச்சர், ஜல்சக்தி துறை அமைச்சருக்கு கடிதம்

  • புதுச்சேரியில் நாளை முதல் பள்ளிகள், கல்லூரிகள் திறப்பு – கொரோனா தடுப்பு பணிகள் தீவிரம்

  • புதுச்சேரியில் இன்று முதல் அனைத்து வகை மதுபான விலை 20 சதவீதம் அதிகரிப்பு

  • நாசிக்கில் பணம் அச்சடிக்கும் இடத்தில் 6 மாதங்களில் ரூபாய் 5 லட்சம் மாயம் – தீவிர விசாரணை

  • கொரோனா மூன்றாவது அலையைத் தடுப்பதற்கு மக்கள் கூடுவதை தவிர்க்க வேண்டும் – மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்

  • மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 17 சதவீதத்தில் இருந்து 28 சதவீதமாக உயர்வு

  • தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு பரவலாக மழை பெய்வதற்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்