தமிழ்நாடு :



  • கொரோனா தொற்று அதிகரிப்பால் தமிழகத்தில் மீண்டும் இன்று மெகா தடுப்பூசி முகாம் - 1 லட்சம் இடங்களில் தடுப்பூசி செலுத்த ஏற்பாடு

  • வானகரத்தில் அதிமுக பொதுக்குழுவுக்கான ஏற்பாடுகள் தீவிரம் - இதுதொடர்பான வழக்கில் நாளை உயர்நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது

  • உயர்கல்வி மாணவிகளுக்கு ரூ.1000 வழங்கும் திட்டத்திற்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் - இதுவரை 2.8 லட்சம் மாணவிகள் விண்ணப்பம் 

  • திண்டுக்கல் தொழிலதிபரை டெல்லிக்கு அழைத்து கடத்திய கும்பல் கைது  - 3 மாநில காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை 

  • தமிழகம் உட்பட நாடு முழுவதும் பக்ரீத் பண்டிகை கொண்டாட்டம் - பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை


இந்தியா :



  • கர்நாடகாவின் கபிணி, கே.ஆர்.எஸ் அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் நீர் வெளியேற்றம் அதிகரிப்பு - கரையோர மக்களுக்கு எச்சரிக்கை 

  • 5ஜி அலைக்கற்றை ஏலத்தில் அதானி நிறுவனம் பங்கேற்பு அம்பானி நிறுவனத்துடன் போட்டி

  • நடப்பு நிதியாண்டின் 2 ஆம் பாதியிலிருந்து பணவீக்கம் படிப்படியாக குறையும் - ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தகவல் 

  • அமர்நாத்தில் மேக வெடிப்பினால் கொட்டிய கனமழையில், வெள்ளப்பெருக்கில் சிக்கி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 16 ஆக உயர்வு  

  • அடுத்த 5 ஆண்டுக்குள் இந்தியாவில் பெட்ரோல் உட்பட புதைபடிவ எரிபொருளுக்கு தடை விதிக்கப்படும் - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தகவல் 

  • நொய்டா மெட்ரோ ரயில் நிலையத்தில் பிறந்தநாள் கொண்டாடிய பிரபல யூ-ட்யூபர் கைது 

  • இந்தியாவில் ஜூன் மாதத்தில் பயன்படுத்தப்பட்ட எரிபொருள் விற்பனை 17.9% அதிகரிப்பு 


உலகம் :



  • இலங்கையில் மக்கள் போராட்டத்தால் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவை தொடர்ந்து அதிபர் கோத்தபய ராஜபக்சவும் பதவி விலக முடிவு 

  • போர்க்களமான இலங்கை தலைநகர் கொழும்பு - அதிபர் மாளிகையை போராட்டக்காரர்கள் கைப்பற்றிய நிலையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவின் வீட்டுக்கும் தீ வைப்பு 

  • மக்கள் போராட்டத்துக்கு பயந்து தப்பியோடிய இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச ஐக்கிய அரபு அமீரகத்தில் தஞ்சம் அடைய திட்டம் என தகவல் 

  • இந்தியா உள்ளிட்ட 5 நாடுகளின் உக்ரைன் தூதர்கள் நீக்கம் - அதிபர் ஜெலென்ஸ்கி அறிவிப்பு

  • கருக்கலைப்பு உரிமையை ரத்து செய்த உச்சநீதிமன்றம் தீர்ப்புக்கு மத்தியில் கருக்கலைப்பை பாதுகாக்கும் உத்தரவில் ஜோ பைடன் கையெழுத்து


விளையாட்டு :



  • இங்கிலாந்து அணிக்கெதிரான 2வது டி20 போட்டியிலும் இந்திய அணி வெற்றி - 3 போட்டிகள் கொண்ட தொடரையும் கைப்பற்றியது. 

  • விம்பிள்டன் டென்னிஸில் முதல் கிரான்ட்ஸ்லாம் சாம்பியன் பட்டம் வென்றார் கஜகஸ்தான் வீராங்கனை எலினா ரைபகினா 

  • மலேசிய மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: அரையிறுதி போட்டியில் இந்திய வீரர் பிரனாய் தோல்வி..!


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண