தமிழ்நாடு :



  • அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மேல்நிலை படிக்கும் விருப்பம் உள்ள மாணவர்களுக்கு உயர்கல்வி போட்டி தேர்வுக்கு தயார் செய்யும் வகையில் பள்ளிகளிலே பயிற்சி அளிக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.

  • திருச்செந்தூரில் ISRO-இன்  சிறிய ரக செயற்கைகோள் ஏவுதளம்: நிலம் கையகப்படுத்துவதற்கான கால அவகாசத்தை மேலும் ஓராண்டு நீட்டித்து தமிழக அரசு உத்தரவு.

  • தமிழ்நாட்டில் இன்று நடைபெறவிருந்த பேரணி ஒத்திவைக்கப்படுவதாக ஆர்.எஸ்.எஸ் அமைப்பு அறிவித்துள்ளது.

  • தமிழ்நாடு, புதுவை, காரைக்கால் பகுதிகளில் அடுத்த இரண்டு நாள்களுக்கு ஒரு சில இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

  • திருவண்ணாமலை மாவட்டத்தில் அரசு கேபிள் டிவி செட்-டாப் பாக்ஸ்களுக்கு பதில் தனியார் நிறுவன செட்-டாப் பாக்ஸ்களை சப்ளை செய்து 41 லட்சம் முறைகேடு நடந்துள்ளதாக வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

  • புதிய வாகன சட்டம் அமலுக்கு வந்த 10 நாட்களில், சென்னையில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவாகியுள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.

  • தமிழ்நாட்டில் சென்னை எழும்பூர், ராமேஸ்வரம், காட்பாடி, மதுரை ஆகிய ரயில் நிலையங்களில் மேம்பாட்டுப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. 


இந்தியா:



  • ஆந்திர பிரதேசம் நந்திகாமா என்.டி.ஆர் மாவட்டத்தில் நடைபெற்ற சாலை பேரணியில் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு மீது கல் வீசி தாக்குதல்.

  • ஒடிசா, ராஜஸ்தான், பீகார், உத்தரபிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் இடைத்தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 

  • மும்பை ஜே.ஜே மருத்துவமனையின் கீழ் 132 ஆண்டுகள் பழமை வாய்ந்த 200 மீட்டர் நீளமுள்ள சுரங்கப்பாதை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.

  • டெல்லியில் அதிகரித்து வரும் காற்று மாசு அளவைக் கட்டுப்படுத்தும் வகையில் மாசுபடுத்தும் வாகனங்களின் பயன்பாட்டு உத்தரவை மீறினால் ரூ.20 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என டெல்லி அரசு அறிவித்துள்ளது.

  • புதுதில்லியில் முப்படைகளின் ராணுவத் தலைமைத் தளபதிகளின் உச்சிமாநாடு வரும் நவம்பர் 7 ஆம் தேதி முதல் 11ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

  • ஆதார் கார்டு இல்லாததால் மருத்துவமனையில் தமிழக பெண்ணுக்கு பிரசவம் பார்க்க மறுத்ததால் அவர் குழந்தையுடன் உயிரிழந்துள்ளார்.


உலகம்:



  • ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இந்தியாவை புகழ்ந்து மீண்டும் பேசியிருப்பது சர்வதேச அரங்கில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

  • அமெரிக்கா உக்ரைனுக்கு கூடுதலாக 400 மில்லியன் டாலர் மதிப்பிலான இராணுவ உதவியை அறிவித்துள்ளது.

  • ரஷியாவின் கோஸ்ட்ரோமா நகரில் உள்ள மதுபான விடுதியில் நேற்று ஏற்பட்ட தீ விபத்தில் 15 பேர் உயிரிழந்தனர்.

  • இம்ரான்கானின் உரைகள் மற்றும் செய்தியாளர் சந்திப்புகளை ஒளிபரப்பு செய்ய பாகிஸ்தான் மின்னணு ஊடக ஒழுங்குமுறை ஆணையம் தடை விதித்துள்ளது.


விளையாட்டு:



  • ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமாருக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடர்ந்துள்ளார்.

  • தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் தலைவரானார் அமைச்சர் பொன்முடியின் மகன்

  • இலங்கையை வீழ்த்தி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரையிறுதிக்குள் இங்கிலாந்து அணி நுழைந்தது.

  • தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட அசோக் சிகாமணி முதலமைச்சரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

  • டி20 உலகக் கோப்பை தொடரில் இன்று இந்திய அணி, ஜிம்பாவே அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டியை இந்திய அணி வெல்லும் பட்சத்தில் அரையிறுதி போட்டிக்கு தகுதி பெறும்.