தமிழ்நாடு:


* மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் விறுவிறுப்பாக நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு பெற்றது.


* அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் 21 காளைகளை அடக்கி முதலிடம் பிடித்த கார்த்திக் காரை பரிசாக வென்றார்.


* சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநராக புவியரசனுக்கு பதிலாக செந்தாமரைக்கண்ணன் நியமனம்.


*  தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு - வானிலை தகவல்


* நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்கக் கோரி  அமைச்சர் அமித் ஷாவை நேரில் சந்தித்து தமிழ்நாடு அனைத்துக்கட்சி எம்.பி.க்கள் குழு வலியுறுத்தல்


* பொங்கல் விடுமுறைகளுக்குப் பிறகு எடுக்கப்படும் பரிசோதனையில் கொரோனா எண்ணிக்கை உயர வாய்ப்பு - அமைச்சர் மா.சுப்பிரமணியன் 


இந்தியா:


* புகழ்பெற்ற கதக் நடன கலைஞர் பண்டிட் பிர்ஜு மகராஜ் உடல்நலக்குறைவால் காலமானார்


 * டெல்லியில் நடைபெறும் குடியரசு தின அணி வகுப்பில் தமிழ்நாடு அரசின் சார்பில் பங்குபெறவிருந்த அலங்கார ஊர்திகள் நிராகரிப்பு.


* பஞ்சாப்பில் ஸ்ரீகுருரவிதாஸ் ஜெயந்தி கொண்டாடப்பட உள்ளதால், ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தேதிக்கு பதிலாக பஞ்சாப் தேர்தல் வரும் பிப்ரவரி 20ம்தேதி ஒரே கட்டமாக நடைபெறும்  -  இந்திய தேர்தல் ஆணையம் 


*  எஃகு ஆலைக்கு எதிரான போராட்டம் - கிராம மக்கள் மீது தடியடி நடத்திய ஒடிசா காவல்துறை


உலகம்:


* அபுதாபி விமான நிலையத்தில் ட்ரோன் வெடிகுண்டு தாக்குதல் - 2 இந்தியர்கள் உட்பட 3 பேர் உயிரிழப்பு


* இந்தியா செல்வந்தர்களுக்கான நாடு? - வெளியான ஆக்ஸ்பாம் அறிக்கையின் அதிர்ச்சித் தகவல்.


விளையாட்டு:


* கோலிக்கு பிறகு ரிஷப் பண்ட் இந்திய டெஸ்ட் அணியை வழி நடத்தவேண்டும் என்று முன்னாள் வீரர் யுவராஜ் சிங் கருத்து தெரிவித்துள்ளார்.


* விராட்கோலி பக்குவமானவர்; ஆனால், ஈகோவை விட்டுத்தர வேண்டும் - கபில்தேவ்


* வரும் தலைமுறையின் உண்மையான தலைவர் கோலி - பாகிஸ்தான் முன்னாள் வேக பந்துவீச்சாளர் முகமது அமீர் 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண