தமிழ்நாடு:



  • அமைச்சர் உதயநிதி சானாதனம் குறித்து பேசியது பற்றி முழுவிபரம் தெரியாமல் பிரதமர் பேசிவருகிறார்; சனாதனப் போர்வையை போர்த்திக்கொண்டு குளிர்காய நினைப்பதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

  • சென்னை முழுவதும் பலத்த காற்றுடன் கனமழை; சாலைகளில் தண்ணீர் தேங்கிய நீரால் வாகன ஓட்டிகள் சிரமம்

  • சென்னை போரூரில் மெட்ரோ ரயில் கட்டுமானப் பணியின் போது ராட்சத கிரேன் மோதியதில் வீட்டின் ஒருபகுதி சேதம் - மெட்ரோ கட்டமைப்பு ஊழியர்களை முற்றுகையிட்ட வீட்டின் உரிமையாளர்
      

  • முதலமைச்சர் ஸ்டாலின் எதையும் புரிந்துகொள்ளாமல் பேசி வருவதாகவும், இந்தியா என்ற சொல்லை உச்சரிக்காதவர் I.N.D.I.A கூட்டணியில் இருப்பதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டு

  • சனாதனம் குறித்த அனைத்த அனைத்து வழக்குகளையும் சட்டப்படி எதிர்கொள்வேன்; மணிப்பூர் கலவரம் ஏழரை லட்சம் கோடி ஊழலை மறைக்கவே மத்திய அரசு முயற்சிக்கிறது - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்


இந்தியா:



  • டெல்லியில் நடைபெறும் ஜி20 மாநாட்டில் பங்கேற்க, அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு புறப்பட்டார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்

  • ஜி 20 மாநாட்டில் பங்கேற்க டெல்லி வந்தடைந்த ஐரோப்பிய தலைவர்களுக்கு உற்சாக வரவேற்பு

  • ஜி 20 மாநாட்டுக்காக டெல்லியில் உச்சகட்ட பாதுகாப்பு; அசம்பாவிதங்களைத் தவிர்க்க டெல்லியில் பாதுகாப்பு பணிகள் தீவிரம்

  • வரும் புத்தாண்டில் இருந்து சென்னை முதல் பெங்களூரு வரையிலான அதிவிரைவுச் சாலை பயன்பாட்டிற்கு வருகிறது - மத்திய அமைச்சர் நிதின் கட்காரி 

  • மத்திய அரசுக்கு இந்தியா மீது என்ன கோபம்; எதிர்க்கட்சிகள் கூட்டணிக்கு பாரத் என பெயர் வைத்தால் பாரத் என்ற பெயரையும் மாற்றிவிடுவார்களா என முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் கேள்வி 

  • இறைச்சி சாப்பிடுவதால்தான் இமாச்சல பிரதேசத்தில் இயற்கை பேரிடர்கள் நடப்பதாக ஐஐடி  மண்டி இயக்குநர் சர்ச்சை பேச்சு - காங்கிரஸ் கண்டனம்


உலகம்: 



  • பிரேசிலை புரட்டிப்போட்ட புயல்; வீடுகளை இழந்து தவிக்கும் மக்கள்; நிவாரணப் பணிகள் தீவிரம்


விளையாட்டு 



  • அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் இறுதிப் போட்டிக்கு நுழைந்த போபண்ணா ஜோடி; அரையிறுதியில் பிரான்ஸ் ஜோடியை வீழ்த்தி அசத்தல்

  • ஆசிய கோப்பையில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் 100 சதவீதம் முழு ஆட்டத்திறனையும் வெளிப்படுத்துவோம் - பாகிஸ்தான் கேப்டன் பாபர் அஸாம்

  • வரும் 22ஆம் தேதி முதல் நடக்கவுள்ள இந்தியா - ஆஸ்திரேலியா ஒருநாள் கிரிக்கெட் தொடர் 5 மொழிகளில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட ஒப்பந்தமாகியுள்ளது. 

  • இங்கிலாந்து நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி இன்று நடக்கிறது. 

  • தென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.