தமிழ்நாடு: 



  • ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர் திடீர் வாபஸ்; எடப்பாடி பழனிசாமி அணிக்கு இரட்டை இலை சின்னம் - தேர்தல் ஆணையம் அறிவிப்பு

  • சட்டக்கல்லூரி, அண்ணா நூற்றாண்டு நூலகம் உள்பட நூலக பணிகளில் 35 காலிப்பணியிடங்கள் - டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

  • பருவம் தவறிய கனமழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிருக்கு ஹெக்டேருக்கு ரூ.20,000 நிவாரணம் - முதலமைச்சர் முக ஸ்டாலின் அறிவிப்பு

  • ராமநாதபுரத்தில் விரைவில் விமான நிலையம் 

  • ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான தமிழ்நாடு அரசின் நலத்திட்ட உதவிகள் தாமதமில்லாமல் போய் சேர வேண்டும் - முதலமைச்சர் முக ஸ்டாலின் உத்தரவு

  • ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் - திமுகவில் 40 நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியல் வெளியீடு

  • குட்கா முறைகேடு தொடர்பான வழக்கில் கூடுதல் குற்றப்பத்திரிக்கையில் பிழையை திருத்த அவகாசம் - சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ கோரிக்கை

  • ஆன்லைன் சூதாட்டத்தினால் பணத்தினை இழந்து மேலும் ஒருவர் உயிரிழந்தை அடுத்து பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது டிவிட்டர் பக்கத்தில் கேள்வி ஒன்றை எழுப்பியுள்ளார்.

  • ”உதயநிதி ஸ்டாலின் கவனத்திற்கு தெரியுமா?, தெரியாதா? என்பதை எல்லாம் மதுரை மக்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள்” - ஆர்.பி.உதயகுமார்.


இந்தியா:



  • அதானி குறித்த விவாதத்தை தவிர்க்கவே மோடி முயற்சிப்பார் - ராகுல் காந்தி குற்றச்சாட்டு

  • மொழிவாரி சிறுபான்மை மாணவர்களுக்கு தமிழ் தேர்விலிருந்து மேலும் ஓராண்டு விலக்கு - உச்சநீதிமன்றம் உத்தரவு

  • கிறித்துவ மத தலைவரான போப் 20 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா வர உள்ளதாக அறிவித்துள்ளார்.

  • பெங்களூரை தலைமையிடமாக கொண்டு செயல்படும் எச்ஏஎல் நிறுவனம் 1,000 ஹெலிகாப்டர்களை உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளது.

  • பல்வேறு தொழில்நிறுவனங்களின் வரிசையில் டெல் நிறுவனமும் ஆறாயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

  • அதானி குழுமத்திற்கு எதிராக மத்திய அரசு நடவடிக்கை எடுக்காமல் மௌனம் காத்து வருவதாக காங்கிரஸ் கட்சி நேற்று நாடுதழுவிய போராட்டத்தில் ஈடுபட்டது. 

  • அலகாபாத் உயர்நீதிமன்றம், கர்நாடகா உயர்நீதிமன்றம் மற்றும் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு புதிய கூடுதல் நீதிபதிகளை மத்திய அரசு நியமித்துள்ளது.


உலகம்:



  • துருக்கி-சிரியா நில நடுக்கம் பலி எண்ணிக்கை 3,800 ஆக உயர்வு...!

  • கராச்சியில் பிப்ரவரி 1 முதல் பெண்களுக்கான இளஞ்சிவப்பு பேருந்து சேவையை தொடங்க பாகிஸ்தான் அரசு ஏற்கனவே முடிவு செய்திருந்தது. இந்நிலையில் இந்த வாரத்தில் இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. 

  • துருக்கி மற்றும் சிரியா பகுதியில் இந்திய நேரப்படி நேற்று மாலை 04.06 மணி அளவில் மிகவும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 7.5ஆக பதிவாகியுள்ளது.

  • துருக்கி-சிரியா நில நடுக்கம் பலி எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடக்கலாம் - அமெரிக்கா


விளையாட்டு:



  • இந்தியாவில் முதன்முறையாக நடைபெற உள்ள மகளிர் ஐ.பி.எல். வரும் மார்ச் 4-ந் தேதி தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

  • இந்திய அணிக்கு எதிராக சர்வதேச கிரிக்கெட் சம்மேளனம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பாகிஸ்தான் முன்னாள் வீரரான ஜாவேத் மியான்தத் வலியுறுத்தியுள்ளார்.

  • அகில இந்திய பாரா வாலிபால் போட்டி : ராஜஸ்தான் அணி முதலிடமும், கர்நாடக மாநில அணி இரண்டாமிடமும், தமிழ்நாடு மற்றும் ஹரியானா அணிகள் மூன்றாமிடமும் பிடித்தன.

  • அஸ்வின் பந்து வீச்சை எதிர்கொள்வது சவாலாக இருக்கும் என்று ஆஸ்திரேலிய தொடக்க ஆட்டக்காரர் கவாஜா கூறியுள்ளார்.