தமிழ்நாடு: 



  • திருப்பி அனுப்பப்பட்ட மசோதா மீண்டும் நிறைவேற்றப்பட்டு அனுப்பினால் ஆளுநரால் மறுக்க முடியாது : ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா நிலுவையில் உள்ள நிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவி கருத்து 

  • மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் நிலுவையில் வைத்திருந்தால் நிராகரிக்கப்படுவதாகவே பொருள் - ஆளுநர் ஆர்.என்.ரவி கருத்து 

  • மக்களை தூண்டிவிட்டு ஸ்டெர்லைட் ஆலையை மூடிவிட்டதாக ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றச்சாட்டு - வெளிநாட்டு நிதி மூலம் இதனை செய்துவிட்டதாக அடுக்கடுக்காக புகார்

  • நாட்டின் வளர்ச்சிக்கு எதிராக வெளிநாட்டு நிதியுதவிகள் இருந்துள்ளதாக ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு - பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவுக்கு பெரும்பாலும் வெளிநாட்டு நிதி வருவதாக கருத்து

  • பதவிப்பிரமாணத்துக்கு முரணாக ஆளுநர் ஆர்.என்.ரவி செயல்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் - சட்டமன்ற நடைமுறைகள் தொடர்பாக உண்மைக்கு புறம்பான கருத்துகளை பேசி வருவதாக குற்றச்சாட்டு 

  • சர்வாதிகாரியாக நினைத்துக் கொண்டு செயல்பட வேண்டாம் என ஆளுநருக்கு முதலமைச்சர் வலியுறுத்தல் - மாநில அரசின் சுருக்கெழுத்து தான் ஆளுநர் என உச்சநீதிமன்ற தீர்ப்பை சுட்டிக்காட்டி விமர்சனம் 

  • அதிமுக பொதுச்செயலாளராக தேர்தல் ஆணையம் அங்கீகரிக்க வேண்டும் - எடப்பாடி பழனிசாமி தரப்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் 

  • பிரதமர் மோடி நாளை தமிழ்நாடு வருகை - 5 அடுக்கு பாதுகாப்பு பணியில் காவல்துறையினர்

  • மகேந்திரகிரி விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் ககன்யான் ராக்கெட் திட்ட இயந்திர சோதனை வெற்றி - 240 விநாடிகள் வெற்றிகரமாக இயக்கி பரிசோதனை 

  • ராமநாதபுரத்தில் பொதுப்பணித்துறை அதிகாரியின் காரில் கட்டுக்கட்டாக சிக்கிய பணம் - கணக்கில் வராத ரூ.32 லட்சம் பறிமுதல் 

  • தமிழ்நாடு, புதுச்சேரியில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தொடங்கியது - மொழிப்பாட தேர்வு எளிதாக இருந்ததாக மாணவ, மாணவிகள் கருத்து

  • நெய்வேலி அருகே நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவி ரயில் முன் பாய்ந்து தற்கொலை - பயிற்சி மையத்தில் வைக்கப்பட்ட தேர்வில் தோல்வியால் விபரீத முடிவு என தகவல் 

  • சென்னை வரும் பிரதமர் மோடியை சந்திக்க எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் திட்டம் 

  • திண்டுக்கலில் ஓடும் பேருந்தில் பெண் கழுத்தறுத்து கொலை - போலீசார் தீவிர விசாரணை 

  • திருச்சியில் ரூ.600 கோடியில் டைடல் பார்க் அமைக்கப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு சட்டமன்றத்தில் அறிவிப்பு 

  • முதுநிலை ஆசிரியர் பணியில் தமிழில் படித்தவர்களுக்கு அநீதி இழைப்பதா? - ஆசிரியர் தேர்வு வாரியம் 10 ஆண்டுகளாக சமூக நீதிக்கு எதிராக செயல்படுவதாக ராமதாஸ் கண்டனம் 

  • தமிழ்நாட்டில் விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய எந்த திட்டத்தையும் மத்திய அரசு கொண்டு வராது - நிலக்கரி சுரங்கம் தொடர்பான கேள்விக்கு பாஜக தலைவர் அண்ணாமலை பதில் 

  • கலாஷேத்ரா பாலியல் தொல்லை விவகாரத்தில் அரசியல் நடப்பதாக நடிகை அபிராமி குற்றச்சாட்டு 


இந்தியா:



  • ராகுல்காந்தி மற்றும் அதானி விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் கடும் அமளி - இரு அவைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு 

  • சமூக நீதியை காப்பது போல எதிர்க்கட்சிகள் நாடகமாடுகின்றன- பாஜக நிறுவன தினத்தில் பிரதமர் மோடி கடும் விமர்சனம் 

  • இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா - மாநில சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா இன்று ஆலோசனை

  • சர்ச்சைக்குரிய ஆன்லைன் சூதாட்டத்திற்கு புதிய விதிகளை வெளியிட்ட மத்திய அரசு - பணத்தை கையாளும் விளையாட்டுக்கு தடை விதிக்கும் குழு அமைப்பு 

  • ஆம் ஆத்மி கட்சியை தேசிய கட்சியாக அறிவிக்கக்கோரிய வழக்கு - தேர்தல் ஆணையம் ஏப்ரல் 13 ஆம் தேதிக்குள் முடிவெடுக்க கர்நாடகா உயர்நீதிமன்றம் உத்தரவு 


உலகம்:



  • கூட்டுப் போர்  பயிற்சியில் ஈடுபடும் நாடுகளின் மீது தாக்குதல் நடத்தப்படும் - வடகொரியா பகிரங்க எச்சரிக்கை

  • அரசியலில் இருந்து விடைபெறுவதாக நியூசிலாந்து முன்னாள் பிரதமர் ஜெசிந்தா ஆர்டன்  அறிவிப்பு 

  • ஆப்பிரிக்க நாடுகளில் வேகமாக பரவி வரும் மார்பர்க் வைரஸ் - மிக தீவிர பாதிப்பை ஏற்படுத்துவதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை 

  • பிரான்ஸில் ஓய்வுதிய சீர்திருத்த திட்டத்தை எதிர்த்து போராட்டம் - வாகனங்களுக்கு தீ வைப்பு 


விளையாட்டு:



  • ஐபிஎல் தொடர் : பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா அணி 81 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி 

  • சர்வதேச கால்பந்து சங்க அணிகளின் தரவரிசை பட்டியலில்  அர்ஜென்டினா முதலிடம் - 3வது இடத்துக்கு தள்ளப்பட்ட பிரேசில்