தமிழ்நாடு: 



  • வைக்கம் போராட்டம் நூற்றாண்டு விழா: அரசு சார்பில் ஓராண்டு கொண்டாடப்படும் என முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவிப்பு

  • கண்ணுக்கு தெரியாத கணக்குக்கு மாற்றம்; ஆளுநர் மாளிகைக்கு ஒதுக்கிய ரூ.5 கோடி மாயம் - சட்டப்பேரவையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் குற்றசாட்டு

  • முதல்வர் காலை உணவு திட்டத்திற்கு ரூ.1 கோடி செலவில் மகளிருக்கு சமையல் செய்முறை பயிற்சி: அமைச்சர் உதயநிதி அறிவிப்பு 

  • தஹி சர்ச்சையில் பின் வாங்கிய மத்திய அரசு; தயிர் என்றே விற்கலாம் என அறிவிப்பு

  • அதிமுக - பாஜக கூட்டணி தொடர்கிறது என எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்

  • சென்னை கலாஷேத்ரா மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாணவ, மாணவிகள் போராட்டம்- ஏப்ரல் 6ம் தேதி வரை மூட உத்தரவு

  • தமிழ்நாட்டில் 3 இடங்களில் 100 டிகிரி  வெயில் - வானிலை ஆய்வு மையம் தகவல்

  •  இருபது ஐ.பி.எஸ். அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

  • அரசு போக்குவரத்துக் கழக ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு பணிக்கொடை உள்ளிட்டவைகளை வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

  • நரிகுறவர்களை திரைப்படம் பார்க்க அனுமதிக்காத ரோஹினி திரையங்க பணியாளர்கள் 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

  • ஹால்மார்க் உடன் 6 இலக்க HUID எண்கள் உள்ள தங்க நகைகளை மட்டுமே ஏப்ரல் 1ஆம் தேதி முதல் விற்க அனுமதி என அறிவிக்கப்பட்டுள்ளது.


இந்தியா:



  • மகாராஷ்டிரா மாநிலத்தில் ஒரே நாளில் 694 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  • மேற்குவங்கத்தில் ராம நவமி கொண்டாட்டத்தின் போது இருபிரிவினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில், வாகனங்கள் தீயிட்டு கொளுத்தப்பட்டன.

  • பிரதமர் மோடி 9ம் தேதி தமிழ்நாட்டில் உள்ள முதுமலைக்கு வருகை தர உள்ளார். அங்கு ஆஸ்கர் வென்ற ஆவண குறும்படத்தின் கதாபாத்திரங்களான பொம்மன், பெள்ளியை நேரில் சந்தித்தனர்.

  • வரும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் மியான்மர் - சென்னைக்கு இடையே விமான சேவை தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

  • அரிய வகை நோய்களின் சிகிச்சைக்காக இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு சுங்க வரியிலிருந்து முழுவதும் விலக்கு அளிக்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

  • மத்தியப்பிரதேசத்தில் மின்கட்டணம் செலுத்தாததால் மின்வாரிய ஊழியர்கள் மூதாட்டி ஒருவரின் வீட்டில் இருந்த பொருட்களை எடுத்து சென்ற சம்பவம் கடும் எதிர்ப்புகளை பெற்றுள்ளது. 


உலகம்:



  • உலக வங்கித்தலைவராக இந்திய வம்சாவளையான அஜய் பங்கா போட்டியின்றி தேர்வு ஆகிறார்.

  • பிலிப்பைன்சில் பயணிகள் கப்பல் தீப்பிடித்து 32 பேர் உயிரிழந்தனர். 230 பேர் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

  • பிரான்சில் ஆலயங்களில் தீ வைத்தவருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

  • அமெரிக்காவில் கொரொனா தேசிய அவசர நிலையை முடிவுக்கு கொண்டு வர செனட் சபை ஒப்புதல் அளித்துள்ளது.

  • ரஷ்யாவில் வசிக்கும் அல்லது பயணிக்கும் அமெரிக்க குடிமக்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என்று வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் வலியுறுத்தி உள்ளார்.


விளையாட்டு: 



  • 10 அணிகள் பங்கேற்கும் 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இன்று தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்- குஜராத் டைட்டன்ஸ் அணிகள் இரவு 7.30 மணிக்கு மோத இருக்கின்றன. 

  • கடந்த சீசனில் சென்னை அணிக்காக அறிமுகமாகி 16 விக்கெட்களை எடுத்துகொடுத்த முகேஷ் சவுத்ரி முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக தொடரில் இருந்து விலகினார். 

  • எல்லாரும் விளையாடுகிறார்கள் நான் மட்டும் இல்லையா என்று ரிஷப் பந்த் கேட்கும் வீடியோ ஒன்று வைரலாகி வரும் நிலையில் அவரது உடல்நிலை குறித்த அப்டேட் என ரசிகர்கள் பூரிப்படைந்தது வருகின்றனர்.

  •