தமிழ்நாடு:



  • திமுக பற்றிய அவதூறு  பேச்சுக்கு அண்ணாமலை மன்னிப்பு கேட்க 48 மணி நேர கெடு: 500 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டும் வழக்கறிஞர் நோட்டீஸ்

  • தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று மாற்றுத்திறனாளிகள்  நலத்துறை மற்றும்  சமூக நலன்,  மகளிர் உரிமைத்துறை  மீதான மானியக் கோரிக்கை  மீது விவாதம் -  உறுப்பினர்களின் கேள்விக்கு பதிலளித்த பின்பு துறைசார்ந்த அறிவிப்புகளை அமைச்சர் வெளியிடுகிறார் 

  • தமிழகம் - புதுச்சேரியில்  உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் இன்று முதல் முகக்கவசம் கட்டாயம் - கொரோனா முன்னெச்சரிக்கையாக நடவடிக்கை

  • கைதிகளின் பற்களை பிடுங்கிய விவகாரம்: விசாரணை அதிகாரி  அமுதா இன்று 2ம் கட்ட விசாரணை

  • மதுரையில் ஆகஸ்ட் 20ம் தேதி மாநாடு:  நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் தான் கூட்டணி என அறிவிப்பு

  • சதுரகிரி கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு இன்று முதல் 4 நாட்களுக்கு அனுமதி


இந்தியா:



  • மேக் இன் இந்தியா திட்டம் உலக அளவில் முன்னேறி வருவதாக பிரதமர் மோடி புகாழாரம்

  • பாஜக நடத்தும்  அழுக்கான அரசியல் வெளிப்பாடே  தம் மீது புனையப்பட்டுள்ள வழக்கு: 9 மணி நேர சிபிஐ விசாரணைக்குப் பிறகு டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் விமர்சனம்

  • பிரதமர் மோடி பட்டப்படிப்பு சான்றிதழ் தொடர்பாக குஜராத் பல்கலைக்கழகத்தை விமர்சித்தத விவகாரம்: மே 23ம் தேதி நேரில் ஆஜராக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அகமதாபாத் நீதிமன்றம் உத்தரவு

  • டெல்லி சட்டசபையின்  ஒருநாள் கூட்டத்தை கூட்ட துணை நிலை ஆளுநர் எதிர்ப்பு: விதிகளை பின்பற்றவில்லை என குற்றச்சாட்டு

  • உத்தரபிரதேசத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட  தாதஅ அதிக் அகமது  மற்றும் அவரது சகோதரரின் உடல்கள் அடக்கம்:  பலத்த போலீஸ் பாதுகாப்புடன்  பிரயாக்ராஜ் மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டடன

  • மகாராஷ்டிராவில் அரசு விழாவில் வெயிலின் தாக்கத்தால் 11 பேர் சுருண்டு விழுந்து பலி: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற விருது வழங்கும் நிகழ்ச்சியை திறந்த வெளியில் நடத்தியதால் சோகம் 


உலகம்:



  • உக்ரைன் - ரஷ்யா மக்கள் அமைதியுடன்  வாழ வேண்டும்  என போப் பிரான்சிஸ் ஆர்த்தடாக்ஸ் ஈஸ்டர் வாழ்த்து

  • சூடானில் ராணுவம் மற்றும் துணை ராணுவம் இடையே மோதல் - ஒரு இந்தியர் உட்பட 50-க்கும் மேற்பட்டோர் பலி

  • அமெரிக்காவின் அல்பாமா மாகாணத்தில்  கேளிக்கை விடுதியில் துப்பாக்கிச்சூடு: 4 பேர் பலி,  படுகாயமடைந்த 28 பேருக்கு சிகிச்சை

  • துபாய் அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து: தமிழகத்தை சேர்ந்த 2 பேர் உட்பட 16 பேர் பலி


விளையாட்டு:



  • ஐபிஎல் தொடரின் இன்றைய லீக் போட்டியில் சென்னை மற்றும் பெங்களூரு அணிகள் மோதல்

  • ஐபிஎல் தொடரின் நேற்றைய முதல் லீக் போட்டியில் கொல்கத்தா அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை அணி வீழ்த்தியது

  • ஐபிஎல் தொடரின் நேற்றைய இரண்டாவது லீக் போட்டியில் குஜராத் அணியை 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வீழ்த்தியது

  • கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியின் மூலம் ஐபிஎல் தொடரில் அறிமுகமானார் அர்ஜுன் டெண்டுல்கர். தந்தை சச்சின் டெண்டுல்கர் வாழ்த்து

  • ரஞ்சி கோப்பைக்கான  பரிசுத்தொகை ரூ.5 கோடி ஆக அதிகரிப்பு: பல்வேறு உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளுக்கு  பரிசுத்தொகையை உயர்த்தியது பிசிசிஐ