குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவை தமிழ்நாடு அரசின் பிரதிநிதிகள் நாளை சந்தித்து பேச உள்ளனர்.


தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, ஆர். ராசா, என்.ஆர். இளங்கோ மற்றும் டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் ஆளுநர் விவரகாரம் தொடர்பாக சந்திக்க உள்ளனர். நாளை காலை 11.45 மணிக்கு குடியரசுத் தலைவரைச் சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.