மருத்துவத்திற்காக மக்கள் நேரடியாக செலவு செய்வது குறைகிறது.. வெளியான ரிப்போர்ட்!

மருத்துவ சிகிச்சைக்காக மக்கள் தங்கள் சொந்த பணத்தை நேரடியாக செலவு செய்வது பெருமளவு குறைந்துள்ளதாக தேசிய சுகாதார கணக்கில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Continues below advertisement

கடந்த 2021-22 ஆம் ஆண்டிற்கான தேசிய சுகாதார கணக்கு தரவுகள் மூலம் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. மருத்துவ சிகிச்சைக்காக மக்கள் தங்கள் சொந்த பணத்தை நேரடியாக செலவு செய்வது பெருமளவு குறைந்துள்ளது.  

Continues below advertisement

மருத்துவ சிகிச்சைக்கு மக்கள் செலவு செய்வது குறைகிறது: 

மக்களின் மருத்துவ செலவுகளுக்காக அரசாங்கம் செலவு செய்வதும், மேம்பட்ட பொது சுகாதார கட்டமைப்பின் காரணமாகவும் 2014-15 மற்றும் 2021-22 க்கு இடைப்பட்ட காலத்தில், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுகாதாரத்திற்கான அரசின் செலவு 1.13 சதவிகில் முதல் 1.84 சதவிகிதம் வரை உயர்ந்தது.

கூடுதலாக, ஒட்டுமொத்த அரசு செலவினங்களில் இதன் பங்கு 3.94% இலிருந்து 6.12% ஆக உயர்ந்தது. இது பொது சுகாதாரத்திற்கான வலுவான அர்ப்பணிப்பை பிரதிபலிக்கிறது. அதே காலகட்டத்தில், தனிநபர் சுகாதார செலவினம் ரூ 1,108 இலிருந்து ரூ3,169 ஆக மூன்று மடங்காக உயர்ந்தது.

இந்த அதிகரிப்பு பொது சுகாதார உள்கட்டமைப்பை வலுப்படுத்த அரசை அனுமதிக்கிறது. சேவைகளை மிகவும் மலிவாகவும், பொதுமக்களுக்கு அணுகக்கூடியதாகவும் ஆக்குகிறது. பெருந்தொற்று காலத்தில் அரசின் நடவடிக்கையால் இந்த மாற்றம் மேலும் வலியுறுத்தப்பட்டது.

உடனடி சுகாதாரத் தேவைகள் மற்றும் தொற்றா நோய்களின் (என்.சி.டி) எழுச்சி போன்ற நீண்டகால சுகாதார சவால்கள் ஆகியவற்றை சமாளிக்க அரசின் இந்த பணம் பயன்படுத்தப்படுகிறது.

இந்தியாவில் மருத்துவ சிகிச்சைக்காக மக்கள் தங்கள் பணத்தை செலவு செய்வது நீண்ட காலமாக ஒரு குறிப்பிடத்தக்க சவாலாக இருந்து வருகிறது. குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களில் மருத்துவ சிகிச்சைக்காக தங்கள் வருமானம் அல்லது சேமிப்பில் பெரும் பகுதியை செலவிடுகின்றனர்.

பொது சுகாதார உள்கட்டமைப்பு மற்றும் பணியாளர்கள் மீது கவனம் செலுத்துதல்:

பொது சுகாதார உள்கட்டமைப்பு, சுகாதாரப் பணியாளர்களுக்கு பயிற்சி மற்றும் சுகாதார வசதிகளை மேம்படுத்துதல், குறிப்பாக கிராமப்புற மற்றும் பின்தங்கிய பகுதிகளில், மருத்துவ சேவை கிடைப்பதை மேம்படுத்துதல் மக்களின் நேரடி சுமைகளை குறைக்கிறது.

தொற்றாத நோய்களுக்கான திட்டங்கள் (NCDs):

அதிகரித்து வரும் தொற்றாத நோய்கள், இந்த நீண்டகால சுகாதார நிலைமைகளை நிர்வகிப்பதற்கும் தடுப்பதற்கும் அரசாங்கம் இலக்கு திட்டங்களைத் தொடங்கியுள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கை மற்றும் நீண்ட கால சுகாதார உத்தி:

கொரோனா தொற்றுநோய், வலுவான சுகாதார அமைப்பின் அவசியத்தை எடுத்துரைக்கிறது. பொது சுகாதாரத்தில் கணிசமான முதலீடுகளுக்கு வழிவகுக்கிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கை உடனடித் தேவைகளை நிவர்த்தி செய்யும் அதே வேளையில், நீண்ட காலத்திற்கு மக்களின் சுமையை குறைக்கும் மலிவு சுகாதார விருப்பங்களுக்கு ஒரு அடித்தளத்தை அமைத்துள்ளது.

 

Continues below advertisement