பா.ஜ.க. ஆட்சியில் இல்லாத மாநில முதலமைச்சர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். சட்டப்பேரவையில் நிறைவேற்றும் மசோதாவுக்கு ஒப்புதல்தர கால நிர்ணயம் தொடர்பாக தீர்மானம் நிறைவேற்ற கோரிக்கை விடுத்துள்ளார். 


ஆளுநர்கள் உரிய காலத்திற்குள் ஒப்புதல்தர மத்திய அரசு குடியரசுத் தலைவர் அறிவுரை தர வலியுறுத்தி தமிழ்நாடு சட்டப்பேரவையில் தனி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையெடுத்து, மற்ற மாநிலங்களுக்கும் தீர்மானம் நிறைவேற்றிட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். கேரளா, கர்நாடகா,ஆந்திரா, தெலங்கானா, மேற்கு வங்காளம், டெல்லி, இராஜஸ்தான் உள்ளிட்ட மாநில முதலமைச்சர்களுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.


தமிழ்நாடு சட்டப்பேரவையில் தனித் தீர்மானம் நிறைவேற்றம்:


தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள சட்ட மசோதாவிற்கு, ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் காலம் தாழ்த்தி வரும் நிலையில், அதை தடுப்பதற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க குறிப்பிட்ட காலத்தை நிர்ணயம் செய்ய தனி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.


தமிழ்நாடு ஆளுநருக்கு உரிய அறிவுரை வழங்க மத்திய அரசையும், குடியரசுத் தலைவரையும் வலியுறுத்தி தனித்தீர்மானம் தமிழ்நாடு சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது.


 சட்டமன்றப் பேரவையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு உரிய அரசும், மாண்புமிகு குடியரசுத் அறிவுரைகள் நிறைவேற்றப்பட்ட வழங்கிட தனிக் தலைவர் வலியுறுத்தி அவர்களும் தகுந்த 10.4.2023 தீர்மானத்தை அன்று இணைத்து அதனடிப்படையில் ஒவ்வொரு மாநில சட்டமன்றப் பேரவையிலும் தீர்மானம் நிறைவேற்றிடக் முதலமைச்சர்களுக்கு கோரி மாண்புமிகு திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் கடிதம். பா.ஜ.க அல்லாத தமிழ்நாடு மாநில முதலமைச்சர்


முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தின் விவரம்:


இந்தியாவில் மக்களாட்சி இன்று முக்கியமான கட்டத்தில் உள்ளது என்பதையும், நமது நாட்டில் கூட்டாட்சித் தத்துவம் என்பது படிப்படியாக மறைந்து வருவதையும் காண்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் ஆளுநரின் கடமைகள் குறித்தும், மத்திய மற்றும் மாநில அரசுகளின் பொறுப்புகளையும் வரையறுக்கப்பட்டுள்ள போதிலும், அவைகள் இப்போது மதிக்கப்படுவதோ அல்லது பின்பற்றப்படுவதோ இல்லை என்றும் அதனால் மாநில பெரிதும் பாதிக்கப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.


மாநிலங்களில் சட்டமன்றங்களில் பல்வேறு மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு ஒப்புதலுக்கு அனுப்பப்பட்ட பிறகு, அதற்கு சில மாநில ஆளுநர்கள் ஒப்புதல் வழங்காமல் காலவரையின்றி நிலுவையில் வைத்திருப்பதால் அந்தந்த மாநில நிர்வாக செயல்பாடுகள் அந்த குறிப்பிட்ட இனங்களில் முடங்கிப் போயிருப்பதையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.


மேலும், தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு மசோதா' உள்ளிட்டபல்வேறு மசோதாக்கள் ஆளுநருக்கு அனுப்பிவைக்கப்பட்ட 'ஆன்லைன் ரம்மியை தடை செய்வதற்கான முன்வடிவுகளுக்கு ஒப்புதல் வழங்கும் பொருட்டு  எழுப்பிய சந்தேகங்களை பலமுறை தெளிவுபடுத்தியும் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார். அம்முயற்சிகள் பலனளிக்கவில்லை என்றும், இதே நிலைதான் பல்வேறு மாநிலங்களிலும் உள்ளன என்றும் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.


இந்தச் சூழ்நிலையில், அந்தந்த மாநில சட்டமன்றங்களால் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஆளுநர்கள் ஒப்புதல் அளிப்பதற்கான காலக்கெடுவை நிர்ணயம் செய்யுமாறு மத்திய அரசு  மற்றும் குடியரசுத் தலைவரை வலியுறுத்தி மாநிலச் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுவது ஏற்புடையதாக இருக்கும் என்று கருதியையும், தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள மசோதா பற்றியும் முதலமைச்சர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.


பிற  மாநிலங்களுக்கும் ஏற்புடையதாக இருக்கும் என  நம்புவதாகவும், மாநில சட்டமன்றத்திலும் இதேபோன்ற தீர்மானத்தை நிறைவேற்றுவதன் மூலம் மாநில அரசுகள் மற்றும் சட்டமன்றங்களின் இறையாண்மை மற்றும் சுயமரியாதையை நிலைநிறுத்துவதற்காக தங்கள் ஆதரவை வழங்குவார்கள் என்றும் உறுதியாக நம்புவதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.