தெலங்கானாவில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலுக்கான அகில இந்திய காங்கிரஸ் கண்காணிப்பாளராக  சு.திருநாவுக்கரசர் எம்.பி. நியமிக்கப்பட்டுள்ளார்.






இதுகுறித்து அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் வேணுகோபால் வெளியிட்ட அறிக்கையில், “காங்கிரஸ் தலைவர் ஒப்புதலின்பேரில் தெலங்கானா தேர்தலுக்கு தயாராகும் வகையில் காங்கிரஸ் கட்சிக்கு கண்காணிப்பாளராக எம்பி திருநாவுக்கரசர் நியமிக்கப்பட்டுள்ளார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.