நேஷனல்  ஹெரால்டு முறைகேடு வழக்கு தொடர்பாக சோனியா காந்தியிடன் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. 


இதற்காக, புதுடெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி, தனது மகள் பிரியங்கா காந்தி மற்றும் மகன் ராகுல் காந்தியுடன் ஆஜார் ஆகியுள்ளார். 






சோனியாவிடம் விசாரனை நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக சோனியா காந்தியிடம் நேற்று விசாரணை நடந்ததை தொடர்ந்து இரண்டாவது நாளாக விசாரணை தொடர்கிறது.


வழக்கு:


நேஷனல் ஹெரால்டு நிறுவனத்தை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி பங்குதாரர்களாக உள்ள யங் இந்தியா நிறுவனம் கடந்த 2010ஆம் ஆண்டு கைப்பற்றியது. நேஷனல் ஹெரால்டு நிறுவனத்தை, யங் இந்தியா நிறுவனத்துக்கு  மாற்றியதில் முறைகேடு நடைபெற்றதாக கூறி சுப்பிரமணிய சுவாமி வழக்கு தொடர்ந்திருந்தார். இந்நிலையில் நேஷனல் ஹெரால்டு வழக்கில் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆஜராகுமாறு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருந்தது.


7 ஆண்டுகள் பழமையான வழக்கில் ஆஜராகுமாறு சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்திக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. வழக்கு தொடர்பாக விசாரணைக்கு  சோனியா காந்தியிடம் நேற்றும் விசாரணை நடத்தியது.






நேஷனல் ஹெரால்டு பத்திரிகையை நடத்தி வந்த அசோசியேட்டட் ஜர்னல்ஸ் நிருவனத்தை ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தி நிறுவனத்தின் யங் இந்தியா கைப்பற்றியதல் முறைகேடு நடைபெற்றதாக புகார் எழுந்தது. அதையடுத்து அசோசியேட்டட் ஜர்னல்ஸ் நிறுவனத்தின் சொத்துக்களை அபகரித்து விட்டதாக பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண