துர்கா தேவிக்கு அர்ப்பணிக்கும் வகையில் தாம் எழுதிய 'ஆவதி கலாய மதி வாய கலாய' என்ற கர்பா பாடலை , அனைவரும் கேட்குமாறு பிரதமர் நரேந்திர மோடி இன்று பகிர்ந்து கொண்டுள்ளார்.


இதுகுறித்து பிரதமர் மோடி தெரிவிக்கையில் " இது நவராத்திரியின் புனிதமான நேரம், மக்கள் அன்னை துர்கா மீதான பக்தியால் ஒன்றுபட்டு வெவ்வேறு வழிகளில் கொண்டாடுகிறார்கள். இந்தப் பயபக்தியுடனும் மகிழ்ச்சியுடனும், அவரது சக்தி மற்றும் கருணையை குறிக்கும் விதமாக நான் எழுதிய ஒரு கர்பா பாடலை  கேளுங்கள். அவரது ஆசிர்வாதம் எப்போதும் நம் மீது இருக்கட்டும்.






"நவராத்திரியின் இந்த மங்களகரமான திருவிழாவானது துர்காவை வழிபடும் மக்களால் வெவ்வேறு வழிகளில் கொண்டாடப்படுகிறது. அதே நம்பிக்கையுடனும் பக்தியுடனும் நான் 'ஆவதி கலாய மதி வாய கலாய' என்ற கர்பாவையும் இயற்றியுள்ளேன். எல்லையற்ற ஆசீர்வாதங்கள் கிடைக்கட்டும். மா ஜகதம்பா எப்பொழுதும் நம் மீது கருணையோடு இருக்கட்டும்.
 


"இந்த கர்பா பாடலை இனிமையாகப் பாடிய வளர்ந்து வரும் பாடகர் பூர்வ மந்திரிக்கு நான் நன்றி கூறுகிறேன் என தெரிவித்துள்ளார். மேலும் கர்பா பாடலை பாடிய பாடகர் பூர்வ மந்திரிக்கு மோடி நன்றி தெரிவித்துள்ளார். 


இந்த தருணத்தில், பிரதம மோடி எழுதிய பாடலை பலரும் , தங்களது சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். 


 


Video: Bear Fight against Tiger: தனது குட்டியை காப்பாற்ற புலியை எதிர்த்து சண்டை போட்ட தாய் கரடியின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.