இந்தியாவை அடுத்த 5 ஆண்டுகளுக்கு ஆளப்போவது யார் என்பதை மக்களவை தேர்தல் முடிவுகள் தீர்மானிக்க உள்ளது. ஏற்கனவே, இரண்டு கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், இன்று மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு நடந்து வருகிறது.

Continues below advertisement

தொடர் சர்ச்சையில் சிக்கும் பிரதமர்:

முதல் இரண்டு கட்டங்களில் தமிழ்நாடு, கேரளா, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களுக்கு தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டது. இன்று, குஜராத் உள்பட 12 மாநிலங்களில் தேர்தல் நடந்து வருகிறது. தேர்தல் தொடங்கியதில் இருந்து பிரதமர் மோடி சர்ச்சையாக பேசி வருவது தொடர்கதையாகி வருகிறது.

இஸ்லாமியர்கள், காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை தொடர்பாக அவர் கூறிய கருத்துகள் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. வெறுப்பை தூண்டும் விதமாக பேசுவதாக பிரதமர் மோடிக்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

Continues below advertisement

"ராமர் கோயிலை பூட்டி விடுவார்கள்"