கொரோனாவை தடுக்க முகக்கவசம் அணியுமாறு மக்களுக்கு மாநில அரசுகள் அறிவுறுத்த வேண்டும் என மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.


இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி கொரோனா நிலைமை குறித்து உயர்மட்ட குழுவுடன் ஆலோசனையில் இன்று ஈடுபட்டார்.


மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா, உள்துறை அமைச்சர் அமித் ஷா, விமான போக்குவரத்து அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா மற்றும் உயர் அதிகாரிகள் இந்த விர்ச்சுவல் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.


புதிய வகை கொரோனா விவகாரத்தை உன்னிப்பாக கவனித்து வருவதாக நாடாளுமன்றத்தில் அமைச்சர் மன்சுக் மாண்ட்வியா விளக்கமளித்தார். தொடர்ந்து பேசிய அவர், சீனாவில் கொரொனா பரவல் நிலவரத்தை இந்தியா கவனித்து வருகிறது. கொரோனாவை தடுக்க முகக்கவசம் அணியுமாறு மக்களுக்கு மாநில அரசுகள் அறிவுறுத்த வேண்டும்.


இந்தியாவில் கொரோனா தொற்று விகிதம் குறைந்து வருகிறது. இருப்பினும், புதிய  கொரோனா வகையை கண்டறிய இந்தியாவில் சோதனைகள் நடைபெற்று வருகிறது. இந்தியாவில் உள்ள விமான நிலையங்களுக்கு வரும் அனைத்து சர்வதேச பயணிகளில் 2 சதவீதம் பேருக்கு கொரோனா வைரஸ் சோதனை தோராயமான மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த வார தொடக்கத்தில், எந்தவொரு புதிய கொரோனா வகைகளையும் உற்று கவனிக்குமாறு மாநிலங்களை மத்திய அரசு கேட்டு கொண்டு வருகிறது.


Pongal 2023 Gift: குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1,000.. பொங்கல் பரிசு கிட்டில் என்னென்ன? அறிவித்த முதலமைச்சர் மு.க ஸ்டாலின்..


மேலும் சீனாவிலும் உலகின் பிற பகுதிகளிலும் தொற்றுநோய்கள் அதிகரிப்பதை காரணம் காட்டி மக்கள் நெரிசலான பகுதிகளில் முககவசத்தை அணியுமாறு மக்களை வலியுறுத்தியது.


சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா குறிப்பிட்ட 6 குறிப்புகள்:
விழிப்புடன் இருக்குமாறும், முககவசங்கள், சானிடைசர்கள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.


ஒவ்வொரு கொரோனா பரிசோதனையை நடத்துமாறு மாநிலங்கள் கேட்டுக் கொள்ளப்பட்டன. இது புதிய மாறுபாடுகளைக் கண்காணிக்க உதவும். கொரோனா பரவல் காரணமாக விமான நிலையங்களில் சர்வதேச பயணிகளுக்கு ரேண்டம் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு வருகிறது.


கொரோனா வைரஸின் எப்போதும் மாறிவரும் தன்மை உலக ஆரோக்கியத்திற்கு தொடர்ந்து ஆபத்தை ஏற்படுத்துகிறது. கடந்த சில நாட்களாக, உலகில் கொரோனா வழக்குகள் அதிகரித்து வருகின்றன. ஆனால் இந்தியாவில், வழக்குகள் குறைந்து வருகின்றன.


சீனாவில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் மற்றும் அதனால் ஏற்படும் இறப்புகளை நாங்கள் கண்காணித்து வருகின்றனர். கொரோனா எதிரான தடுப்பூசி போட்டுக்கொள்ளவும், கொரோனாவுக்கு ஏற்ற நடைமுறையை பின்பற்றவும் மக்களை வலியுறுத்தனர்.