Just In





கட்டணம் இல்லை.. இலவசமா பார்க்கலாம்! நினைவுச் சின்னங்களுக்கு போக ரெடியா?
இந்தியா முழுவதும் உள்ள இந்தியத் தொல்லியல் துறையின் நினைவுச் சின்னங்களைப் பார்வையிடுவோருக்கு நாளை எந்தக் கட்டணமும் வசூலிக்கப்படமாட்டாது என்று மத்திய தொல்லியல் துறை அறிவித்துள்ளது.

உலகம் முழுவதும் வரும் ஏப்ரல் 18ஆம் தேதி (நாளை) கொண்டாடப்படும் பாரம்பரிய தினத்தை (நினைவுச் சின்னங்களுக்கான சர்வதேச தினம்) முன்னிட்டு, இந்தியா முழுவதும் உள்ள இந்தியத் தொல்லியல் துறையின் நினைவுச் சின்னங்களைப் பார்வையிடுவோருக்கு எந்தக் கட்டணமும் வசூலிக்கப்படமாட்டாது என்று மத்திய தொல்லியல் துறை அறிவித்துள்ளது.
நினைவுச்சின்னங்களைப் பார்வையிட கட்டணம் இல்லை:
இந்தியாவின் வளமான கலாச்சார பாரம்பரியத்தை அறிந்து கொள்ள பார்வையாளர்களை ஊக்குவிப்பதை இந்த முயற்சி நோக்கமாகக் கொண்டுள்ளது. தொல்லியல் துறையின் பாதுகாப்பின் கீழ் 3,698 நினைவுச்சின்னங்கள் மற்றும் தலங்கள் உள்ளன.
இதையும் படிக்க: Kodaikanal Must Visit Places: கொடைக்கானல் போறீங்களா.. இந்த இடங்களை மிஸ் பண்ணிடாதீங்க.. அப்புறம் வருத்தப்படுவீங்க.!
நாட்டின் வரலாற்று மரபு மற்றும் கட்டடக்கலை சிறப்புகளுடன் கூடிய இந்தத் தலங்களை மக்கள் பார்வையிட்டு அவற்றின் சிறப்புகளை அறிந்து கொள்ளும் நோக்குடன் மத்திய தொல்லியல் துறை இந்த நடவடிக்கை எடுத்துள்ளது.
தமிழ்நாட்டு நினைவுச்சின்னங்கள்:
நுழைவுக் கட்டணத்தை ரத்து செய்வதன் மூலம், இந்த தினத்தில் அதிக எண்ணிக்கையிலான மக்கள் அவற்றை பார்வையிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் நாட்டின் பாரம்பரியத்தைப் பாதுகாப்பது குறித்தும் அவற்றின் முக்கியத்துவம் குறித்து பொதுமக்கள் தெரிந்து கொள்ள ஊக்குவிக்கப்படுவார்கள் என்றும் மத்திய தொல்லியல் துறை தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் மட்டும் இந்திய தொல்லியல் துறையால் பராமரிக்கப்படும் 242 நினைச்சின்னங்கள் இருக்கின்றன. தஞ்சை பெரிய கோயில், மணிமங்கலம் தர்மேஸ்வரர் கோயில் உள்ளிட்டவை குறிப்பிடத்தக்க நினைவு சின்னங்களாக உள்ளன.
இதையும் படிக்க: ஆளுநர் ரவி மீது கடுப்பில் இருக்கும் பாஜக தலைமை.. தமிழகத்திற்கு விரைவில் நல்ல செய்தி காத்திருக்கு?