உலகம் முழுவதும் நடைபெறும் ஆய்வுகளில் அவ்வப்போது சில திடுக்கிடும் உண்மைகள் வெளியாவது வழக்கம். அந்த ஆய்வுகளின் தரவுகள் பல வகையில் முக்கியமான ஒன்றாக அமையும். அந்த வகையில் தற்போது இந்தியாவில் நடந்த ஆய்வின் தரவுகளின் மூலம் ஒரு அதிர்ச்சியான தகவல் வெளியாகியுள்ளது. ஆண்களைவிட பெண்களே அதிகமானவர்களுடன் உடலுறவு வைத்து கொள்கிறார்கள் என்பது தான் அந்த அதிர்ச்சியான விஷயம். 


மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சக்கத்தின் மூலம் அவ்வப்போது தேசிய குடும்பநல சுகாதார கணக்கெடுப்பு நடத்தப்படுவது வழக்கம். அந்தவகையில் தற்போது அந்த கணக்கெடுப்பின் 5வது சுற்று தரவுகள் வெளியாகியுள்ளன. அந்த தரவுகளில் சில முக்கியமான தகவல்கள் வெளியாகியுள்ளன.


அதன்படி, இந்தியாவிலுள்ள 1.1 லட்சம் பெண்கள் மற்றும் 1 லட்சம் ஆண்களிடம் அவர்களுடைய பாலியல் உறவு குறித்து கேட்கப்பட்டுள்ளது. அதற்கு அவர்கள் கொடுத்த பதில்கள் மூலம் சில உண்மைகள் வெளியாகியுள்ளன. அதன்படி இந்தியாவிலுள்ள 11 மாநிலங்களை ஆண்களைவிட பெண்கள் அதிக நபர்களுடன் பாலியல் உறவு வைத்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது. 


அந்த அறிக்கையின்படி ராஜஸ்தான், ஹரியானா,சண்டிகர், ஜம்மு-காஷ்மீர், லடாக்,மத்திய பிரதேசம், அசாம், கேரளா, லட்சத்தீவுகள், புதுச்சேரி மற்றும் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் இந்த நிலை உள்ளதாக கூறப்படுகிறது. இவற்றில் அதிகபட்சமாக ராஜஸ்தான் மாநிலத்தில் ஒரு பெண் சராசரியாக 3க்கும் மேற்பட்டவர்களுன் பாலியல் உறவு வைத்து கொள்வதாக அறிக்கை தெரிவிக்கிறது. 


அதேபோல் தன்னுடைய மனைவி அல்லாமல் மற்ற நபர்களுடன் உடலுறவு கொண்டவர்கள் பட்டியலில் பெண்களைவிட ஆண்களே அதிகமாக உள்ளனர். தங்களுடைய வாழ்க்கை துணை அல்லாத நபர்களுடன் உடலுறவு கொள்வதில் 4% ஆண்களும், 0.5% பெண்களும் உள்ளதாக அறிக்கை குறிப்பிடுகிறது. 


தேசிய குடும்பநல சுகாதார கணக்கெடுப்பு 5 2019-2021ஆம் ஆண்டு வரை 707 மாவட்டங்களில் எடுக்கப்பட்டது. அதன் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. இந்த தேசிய குடும்ப நல சுகாதார கணக்கெடுப்பு மக்களின் பொருளாதார நிலை, விவரம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை தருகிறது. இந்த தரவுகளை வைத்து அரசு தன்னுடைய கொள்கைகளை வகுத்து வருகிறது. இதன்காரணமாக இந்த தரவுகள் மிகவும் முக்கியமான ஒன்றாக அமைந்துள்ளன. 




செய்தி தகவல்: அறிக்கையை முழுமையாக படிக்க இங்கே க்ளிக் செய்யவும்




மேலும் படிக்க:உபெர் ஓட்டுநரின் மனிதத்துவம்.... மொழித்தடையை தாண்டி கனிவுடன் நடத்தினார்... இணையத்தில் லைக்ஸ் அள்ளும் நெகிழ்ச்சிப் பதிவு!