இந்தியப் பண்பாட்டு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ‘ஞான பாரதம் மிஷன்’, நாட்டின் பண்டைய அறிவுச் செல்வங்களைப் பாதுகாப்பதில் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல்லை எட்டியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, ஹரித்வாரில் உள்ள பதஞ்சலி பல்கலைக்கழகம் இந்தத் திட்டத்தின் அதிகாரப்பூர்வ ‘கிளஸ்டர் சென்டராக’ (Cluster Centre) அறிவிக்கப்பட்டுள்ளது. யோகா கல்வியை மையமாகக் கொண்டு, இத்திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட நாட்டின் முதல் கல்வி நிறுவனம் இதுவாகும்.

Continues below advertisement

ஒப்பந்தமும் விழாவும்

இந்தக் கூட்டாண்மையை உறுதிப்படுத்த, ஹரித்வாரில் நடைபெற்ற சிறப்பு விழாவில் பதஞ்சலி பல்கலைக்கழகம் மற்றும் ஞான பாரதம் மிஷன் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) கையெழுத்தானது. இந்நிகழ்வில் யோகா குரு பாபா ராம்தேவ் மற்றும் ஆச்சார்யா பாலகிருஷ்ணா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த அங்கீகாரம் ஏன் முக்கியமானது?

பதஞ்சலி பல்கலைக்கழக வேந்தர் டாக்டர் ஆச்சார்யா பாலகிருஷ்ணா இது குறித்துக் கூறுகையில்:ஞான பாரதம் திட்டத்தின் கீழ் இதுவரை 33 ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன. அவற்றில் 20 நிறுவனங்கள் மட்டுமே கிளஸ்டர் மையங்களாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளன.இந்த 20 மையங்களில் 8 பல்கலைக்கழகங்கள் மட்டுமே உள்ளன; அதில் யோகா துறையில் முதல் மையமாக பதஞ்சலி திகழ்கிறது.

Continues below advertisement

கல்விப் புரட்சியும் ஆராய்ச்சியும்

ஞான பாரதம் மிஷனின் திட்ட இயக்குநர் டாக்டர் அனிர்பன் தாஷ் கூறுகையில், “பழைய ஆவணங்களைப் பாதுகாப்பது மட்டும் எங்களது நோக்கமல்ல; அவற்றை நவீன கல்வி முறையுடன் ஒருங்கிணைப்பதே இலக்கு” என்றார். இதன்படி, யோகா மற்றும் ஆயுர்வேத கையெழுத்துப் பிரதிகள் குறித்த ஆழமான ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு, அவை இளைஞர்கள் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் ஒரு ‘கல்விப் புரட்சியாக’ மாற்றப்படும் என்று கூறியிருந்தார்.

மத்திய அரசிற்கு நன்றி

இந்த வரலாற்றுத் தருணத்திற்காக பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் கலாச்சார அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் ஆகியோருக்கு சுவாமி ராம்தேவ் நன்றி தெரிவித்தார். இந்தியாவின் மறைந்து வரும் கலாச்சாரப் பாரம்பரியத்தை மீட்டெடுக்கும் பிரதமரின் தொலைநோக்குப் பார்வைக்கு இந்த மிஷன் ஒரு மிகச்சிறந்த உதாரணம் என்று அவர் புகழாரம் சூட்டினார்.