தமிழ்நாடு:



  • தொழில்துறை முதலீடு திட்டங்களுக்கு அமைச்சரவை கூட்டத்தில் ரூ.35,000 கோடிக்கு அனுமதி

  • தென்கிழக்கு வங்கக்கடலில் 7, 8ம் தேதியில் காற்றழுத்தம் - வானிலை ஆய்வு மையம் தகவல்

  • ஆருத்ரா இயக்குநரை வழக்கில் இருந்து விடுவிக்க ரூ. 13 கோடி பெற்ற ஆர்.கே. சுரேஷின் வங்கி கணக்கு முடக்கம்: சொத்துக்களை பறிமுதல் செய்ய முடிவு

  • புகார் அளித்து நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் ஆன்லைன் மூலம் நுகர்வோர் இழப்பீடு பெறலாம் : மின்சார ஒழுங்குமுறை ஆணையம் தகவல் 

  • பட்டியலினத்தவரின் சாதி சான்று விவகாரத்தில் உண்மைத்தன்மை குறித்து ஆராய அதிகாரமில்லை - உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

  • தமிழ்நாட்டில் அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் இன்று  (மே 4) முதல் ஆரம்பவதால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 

  • காஞ்சிபுரம் வரமகாலட்சுமி சில்க்ஸ் நிறுவனத்தில் 37 மணி நேரமாக நடைபெற்று வந்த வருமான வரித்துறை சோதனை நிறைவடைந்தது.

  • நடிகர் சரத் பாபு இறந்து விட்டதாக வெளியான தகவலில் எந்தவிதமான உண்மையும் இல்லை என அவரது சகோதரி கூறியுள்ளார்.

  • பல்பிடுங்கிய விவகாரம்: பல்வீர் சிங் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்தது சிபிசிஐடி காவல்துறை

  • தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் மனோபாலா மரணத்திற்கு திரை பிரபலங்கள் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.


இந்தியா:



  • பத்ம விருதுகளை பெற்ற ஹலக்கி பழங்குடி சமூகத்தை சேர்ந்த துளசி கவுடா, சுக்ரி பொம்மு கவுடா ஆகியோரை பிரதமர் மோடி நேரில் சந்தித்து பேசினார்.

  • இந்தியாவின் நற்பெயரை வெளிநாடுகளில் களங்கப்படுத்துவதை அனுமதிக்க முடியாது என்று துணை குடியரசு தலைவர் ஜெகதீப் தன்கர் கூறியுள்ளார்.

  • கர்நாடகவில் பாஜகவிற்கு ஆதரவான அலை வீசுவதாக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை கூறியுள்ளார்.

  • வாக்காளர்களை கவரும் வகையில் பெங்களூருவில் 36 கிலோ மீட்டர் தூரத்திற்கு பிரதமர் மோடி 6-ந்தேதி பிரமாண்ட ரோடுஷோ நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

  • இந்தியாவில் வேலைவாய்ப்பின்மை விகிதம் நான்கு மாதங்களில இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

  • தி கேரளா ஸ்டோரி திரைப்படத்திற்கு தடை கோரிய மற்றொரு வழக்கையும் உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்க மறுத்துள்ளது. 

  • இந்தியாவில் ஆன்லைன் பணமோசடியில் இந்த ஆண்டு சுமார் 39 சதவீத குடும்பங்கள் பாதித்ததாக ஆய்வில் தெரியவந்தது.


உலகம்:



  • சீனாவில் ரிக்டர் 5.2 அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

  • உலக வங்கியின் அடுத்த தலைவராக இந்திய வம்சாவளியை சேர்ந்த அஜய் பால்சிங் பங்கா, அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டார்.

  • பனாமா எண்ணெய் கப்பல் ஒன்றை ஈரான் கடற்படை சிறைபிடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

  • சூடானில் 7 நாட்கள் போர்நிறுத்த ஒப்பந்தத்திற்கு இரு தரப்பும் ஒப்புதல் அளித்துள்ளது. 

  • ஒரே இரவில் ட்ரோன் தாக்குதல் மூலம் புதினை கொல்ல உக்ரைன் முயற்சித்ததாகவும் ஆனால், அது தோல்வி அடைந்ததாகவும் ரஷியா தெரிவித்துள்ளது.

  • பாகிஸ்தானில் பணவீக்கமானது வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


விளையாட்டு: 



  • பஞ்சாப்  கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 216 ரன்கள் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

  • சென்னை மற்றும் லக்னோ இடையிலா போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டுள்ளது. 

  • ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோத இருக்கின்றன.

  • காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் எஞ்சிய போட்டிகளில் கே.எல். ராகுல் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.