தமிழ்நாடு:

  • ஒரு நாள் பயணமாக டெல்லி சென்ற முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கிண்டி பன்னோக்கு மருத்துவமனை திறந்து வைக்க குடியரசு தலைவருக்கு அழைப்பு விடுத்தார். 
  • ஜூன் 5ஆம் தேதி தமிழ்நாடு வருகிறார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு 
  • மணல் கொள்ளையை தடுத்ததால் சேலம் அருகே கிராம நிர்வாக அலுவலரை கொல்ல முயற்சி, காவல் நிலையத்தில் தஞ்சம்
  • சூடானில் நடக்கும் உள்நாட்டு போரினால் மீட்கப்பட்டவர்களில் 9 பேர் தமிழ்நாடு வருகை
  • மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாரமனை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சந்தித்தார்
  • கோடநாடு கொலை கொள்ளை வழக்கை விசாரிக்கும் நீதிபதி முருகன் இடமாற்றம் 
  • விசாரணைக் கைதிகளின் பற்களைப் பிடுங்கிய வழக்கில் பல்வீர் சிங் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து 4 வாரங்களில் டி.ஜி.பி. பதில் அளிக்க தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் 
  • கொரோனாவிற்குப் பிறகு மாரடைப்பு ஏற்படுவது அதிகரித்துள்ளது -  அமைச்சர் மா. சுப்பிரமணியன்
  • 6 முதல் 12 வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 1ஆம் தேதி பள்ளிகள் திறப்பு, 1 முதல் 5 வகுப்பு வரை ஜூன் 5ஆம் தேதி பள்ளிகள் திறப்பு - அமைச்சர் அன்பில் மகேஷ் 

இந்தியா:

  • வெறுப்பு பிரச்சாரங்களை மேற்கொள்கிறவர்கள் மீது தாமாக நடவடிக்கை எடுக்க மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்
  • பாலியல் குற்றச்சாட்டில் இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூசண் மீது இரண்டு வழக்குகளில் முதல் தகவல் அறிக்கை பதிவு
  • இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 7 ஆயிரத்து 533 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 
  • கர்நாடக தேர்தலில் காங்கிரஸ்க்கு ஆதரவாக பரப்புரை மேற்கொள்ள கமலுக்கு ராகுல் அழைப்பு
  • கர்நாடக தேர்தல் பரப்புரையில் காங்கிரஸ் மூத்த தலைவர் பரமேஸ்வர் மீது கல்வீசி தாக்குதல்
  • தி கேரளா ஸ்டோரி என்ற படத்துக்கு கேரள சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் கண்டனம்

உலகம் 

  • சூடானில் உள்ள அமெரிக்கர்கள் 48 மணி நேரத்தில் வெளியேறுங்கள் - வெள்ளை மாளிகை 
  • 12 நண்பர்களை கொலை செய்த தாய்லாந்து பெண் காவல்துறையால் கைது 
  • தீபாவளி பண்டிகையை பொது விடுமுறையாக அறிவித்தது பென்சில்வேனியா மாகாணம். 
  • அமெரிக்காவில் ராணுவப் பயிற்சியின் போது விமானங்கள் நேருக்கு நேர் மோதல் 

விளையாட்டு

  • ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் லக்னோ அணி பஞ்சாப் அணியை 56 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. 
  • ஐபிஎல் வரலாற்றில் 257 ரன்கள் குவித்து அதிக ரன் குவித்த இரண்டாவது அணி என்ற பெருமை பெற்றது லக்னோ அணி
  • ஐ.பி.எல். தொடரில் இன்று கொல்கத்தா - குஜராத், டெல்லி - சன்ரைசர்ஸ் அணிகள் நேருக்கு நேர் மோதுகின்றன.