தமிழ்நாடு:



  • தவறான செய்திகளை நம்ப வேண்டாம்; டாஸ்மாக்கில் ரூ.2000 நோட்டு வாங்கப்படும் - அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்

  • தெற்கில் ஏற்படுத்தப்பட்டுள்ள இந்த விடியல் இந்தியாவின் மற்ற பகுதிகளுக்கும் பரவ வேண்டும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்வீட்

  • ஓபிஎஸ்,ஈபிஎஸ் அணி இணையாவிட்டால் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவிற்கு தோல்வி நிச்சயம் - முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் பேட்டி

  • தமிழ்நாட்டில் 2000 ரூபாய் நோட்டுகள் பணப்பரிமாற்றத்தை கண்காணிக்க வேண்டும் - பா.ஜ.க. தமிழக தலைவர் அண்ணாமலை மத்திய நிதியமைச்சகத்திற்கு கடிதம்

  • ஏற்காடு கோடை விழா இன்று தொடக்கம் - ஏற்பாடுகள் தீவிரம்

  • விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே விஷச்சாராயம் குடித்து சிகிச்சைப் பெற்று வந்த 39 பேரில் 22 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். 

  • ராகுல்காந்தி இன்று தமிழ்நாடு வரவிருந்த நிலையில், அவரது பயணம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

  • மோசடி வழக்கிலிருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி பாஜகவில் கூட இணைவார் - கரூரில் முன்னாள் அமைச்சர் சின்னசாமி பேட்டி

  • தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக, இன்று 12 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 


இந்தியா: 



  • வங்கிகளில் வரும் 23ம் தேதி முதல் ரூ.2000 நோட்டு மாற்ற சிறப்பு கவுண்டர்கள்- வயதானோர் கியூவில் நிற்பதை தடுக்க பிரத்யேக ஏற்பாடு

  • பெங்களூரு கண்டீரவா மைதானத்தில் பிரமாண்ட விழா; கர்நாடக முதலமைச்சராக சித்தராமையா பதவி ஏற்பு, டி.கே சிவக்குமார் துணை முதலமைச்சராக பதவியேற்றார். 

  • அசாமில் ஜீன்ஸ், லெக்கின்ஸ் ஆகிய உடைகளை அணிய ஆசிரியர்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

  • சிக்கிமில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கித் தவித்த 500 சுற்றுலா பயணிகளை ராணுவத்தினர் பாதுகாப்பாக மீட்டனர்.

  • கடந்தாண்டு பிப்ரவரி மாதம், உக்ரைன் மீது ரஷியா போர் தொடுக்க தொடங்கியதிலிருந்து முதல்முறையாக, இருநாட்டு தலைவர்களும் நேரில் சந்தித்து கொள்கின்றனர்.

  • நாட்டில் இரண்டாயிரம் ரூபாய் நோட்டை தடை செய்தது ஏன்? என பிரதமர் மோடிக்கு ஐதராபாத் எம்.பி. அசாதுதின் ஓவைசி 5 முக்கிய கேள்விகளை எழுப்பியுள்ளார்.

  • தலைநகரில் ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம் உள்ளிட்ட நிர்வாகத்தை கட்டுப்படுத்துவது தொடர்பான உச்ச நீதிமன்ற உத்தரவை ரத்து செய்யும் வகையில், மத்திய அரசு அவசரச் சட்டம் கொண்டு வந்துள்ளது.


உலகம்:



  • விடுதலைப்புலிகளுடனான இறுதிக்கட்ட போரை இனப்படுகொலை என வர்ணித்த கனடா பிரதமர் - இலங்கை கண்டனம்

  • சிங்கப்பூரில் கஞ்சா கடத்தல் வழக்கில் கைதான 35 வயது நபருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.

  • அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஒபாமா உள்ளிட்ட 500 அமெரிக்கர்கள் ரஷியாவுக்குள் நுழைய ரஷ்ய அரசு தடை விதித்துள்ளது.

  • உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் சட்டவிரோத போருக்கு எதிராக ஒன்றாக நிற்போம்: ஜி-7 நாடுகள் அறிவிப்பு


விளையாட்டு:



  • உலகக்கோப்பை வில்வித்தை : தென்கொரிய அணியை வீழ்த்தி இந்திய அணி தங்கப்பதக்கத்தை வென்றுள்ளது.

  • ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஆக்கி தொடர்: 2-வது போட்டியில் இந்திய பெண்கள் அணி தோல்வி

  • கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் 1 ரன் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றிபெற்று பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதிபெற்றது. 

  • குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி பெற்றால் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறலாம் என்ற நிலையில் பெங்களூரு அணி இன்று களமிறங்குகிறது. 

  • டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றிபெற்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதிபெற்றது.