மேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், மேற்கு வங்க சட்டசபையை அந்த மாநில ஆளுநர் கலைத்துள்ள சூழலில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் அனைத்து பதவிகளையும் மம்தா பானர்ஜி கலைப்பதாக அறிவித்துள்ளார்.


அவரது தலைமையின்கீழ் 19 உறுப்பினர்களை கொண்ட புதிய செயற்குழுவை உருவாக்கியுள்ளார். இந்த குழுவில் அபிஷேக் பானர்ஜி, பிர்ஹாத் ஹக்கிம், யஷ்வந்த் சின்கா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.