மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவரான பொருளாதார நிபுணரும் சமூக விமர்சகருமான டாக்டர். பரகலா பிரபாகர், மோடி அரசாங்கத்தை விமர்சித்து, பிரதமர் பொருளாதாரத்தை மெத்தனமாக கையாள்வதாக குற்றம் சாட்டியுள்ளார்.


நிர்மலா சீதாராமனின் கணவர்


டாக்டர் பிரபாகரின் புதிய புத்தகமான 'The Crooked Timber of New India: Essays on A Republic in Crisis' (ஸ்பீக்கிங் டைகர் வெளியீடு) பெங்களூரில் வெளியிடப்பட்டது. இது மோடி அரசாங்கத்தின் பொருளாதாரம், அரசியல் மற்றும் பிறவற்றைக் கையாளும் விஷயங்கள் தொடர்பான கட்டுரைகளைக் கொண்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடியை கடுமையாக விமர்சிப்பவராக அறியப்படும் பிரபாகர், மக்களிடையே மறைந்திருக்கும் பிளவு உணர்வுகளை வரவழைப்பதில் பிரதமர் மோடி மிகவும் திறமையானவர் என்றும் குற்றம் சாட்டியுள்ளார். கரண் தாப்பருக்கு அளித்த பேட்டியில் அவர் தனது உறுதியான கருத்தை தெரிவித்தார்.



மீண்டும் மோடி வந்தால் பேரழிவு


லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸில் முனைவர் பட்டம் பெற்ற பிரபாகர், நிர்மலா சீதாராமனை மணந்தார். 2014 தேர்தலில் 'வளர்ச்சி' என்ற போர்வையில் வெற்றி பெற்ற பாரதிய ஜனதா (பாஜக) மூலம் இந்துத்துவம் தந்திரமாக கடத்தப்பட்டது என்று அவர் மேலும் கூறினார். இது பொருளாதாரத்திற்கு மட்டுமல்ல, இந்தியாவிற்கே பேரழிவை ஏற்படுத்தும் என்றும் பொருளாதார நிபுணர் பிரபாகர் கூறியுள்ளார். 2024-ல் மீண்டும் மோடி ஆட்சி அமைந்தால், அது பேரழிவாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார். பிரதமர் மோடிக்கும் பாஜகவுக்கும் மக்கள் மத்தியில் பெரும் புகழுக்குக் காரணம், மக்களைத் திரட்டும் திறமையால் மட்டும் என்று கூறினார்.


தொடர்புடைய செய்திகள்: Pakistan PM President Salary : ஜனாதிபதி, பிரதமருக்கு இவ்வளவுதான் சம்பளமா..? உச்சநீதிமன்ற நீதிபதிகளை விட குறைவாம்...!


இந்துத்துவாவை புகுத்தும் யுக்தி


2014 ஆம் ஆண்டில், நரேந்திர மோடியும் பாஜகவும் நல்லாட்சி, தூய்மையான மற்றும் ஊழலற்ற அரசாங்கம் மற்றும் 'வளர்ச்சி' என்று வாக்குறுதி அளித்து வாக்கு கேட்டதை டாக்டர் பிரபாகர் நினைவு கூர்ந்தார். இந்துராஷ்டிராவை (இந்து தேசம்) உருவாக்கி, இந்துத்துவ சக்திகளை கட்டவிழ்த்து விட வேண்டும் என்ற அவர்களின் உண்மையான நோக்கம் குறித்து தற்போது தேசம் நம்பிக்கை கொள்ளவில்லை, என்றார். வளர்ச்சி என்ற பெயரை பயன்படுத்தி இந்துத்துவாவை தேசத்தின் மீது அவிழ்த்து விட முயற்சிக்கிறது பாஜக. இதைத்தான் பாஜகவும் மோடியும் நிலைநிறுத்துகிறார்கள் என்றால், அவர்கள் எதிர்க்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.



நிர்மலா சீதாராமனை குறை கூறுகிறாரா?


மறைந்த அருண் ஜெட்லி மற்றும் நிர்மலா சீதாராமன் ஆகியோரை நிதியமைச்சர்கள் என்று குறிப்பிடுகிறீர்களா என்ற தாப்பரின் கேள்விக்கு, அவர் தனிநபர்களைப் பற்றி பேசவில்லை என்று கூறினார். அப்படியென்றால் ஏன் நரேந்திர மோடியின் பெயரைச் சொன்னீர்கள் என்று கேட்டதற்கு, பதறாமல் பொறுமையாக டாக்டர் பிரபாகர், அது ‘மோடி ஆட்சி’ என்பதால்தான். பிரதமர் மோடிதானே பொறுப்பு என்று பதிலளித்தார். பொருளாதாரத்தில் சில அடிப்படைப் பயிற்சி பெற்ற எந்தவொரு பொருளாதார நிபுணரும், இவ்வளவு பெரிய அளவிலும், குறுகிய அறிவிப்பிலும் பணமதிப்பிழப்பை பரிந்துரைத்திருக்க மாட்டார்கள் என்று அவர் வாதிட்டார். இது ஒரு மாபெரும் தவறு, அதைத் தொடர்ந்து வந்த தவறான கொள்கைகள் அந்தத் தவறை அதிகப்படுத்தி நெருக்கடியை அதிகப்படுத்தியது என்று டாக்டர் பிரபாகர் விமர்சித்தார்.