காலிஸ்தானின் சதி இருப்பதாக, டெல்லி காவல்துறைக்கு உளவுத் தகவல் கிடைத்ததையடுத்து பாதுகாப்பானது பலப்படுத்தப்பட்டுள்ளது.


சுதந்திர தினம்:


வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினத்தன்று, காலிஸ்தான் தீவிரவாத அமைப்புகள், கொலை சதிதிட்டம் தீட்டியுள்ளதாகவும் கூறப்படுகிறது.  டெல்லியில் காலிஸ்தானி வாசகங்கள் அடங்கிய போஸ்டர்களை இந்த அமைப்புகள் ஒட்டலாம் என்று கூறப்படுகிறது. இதுமட்டுமின்றி, டெல்லி கொலைகளை செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் கிடைத்ததாக கூறப்படுகிறது.  


உளவுத்துறையின் தகவலையடுத்து, டெல்லி காவல்துறையினர் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். இது தொடர்பாக டெல்லி போலீஸ் கமிஷனர் உயர்மட்டக் கூட்டத்தையும் நடத்தினார். டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவும் உஷார்படுத்தப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 15 ஆம் தேதியை கருத்தில் கொண்டு, டெல்லி காவல்துறை மிகுந்த எச்சரிக்கையுடன் உள்ளது.   


செங்கோட்டையில் கொடியேற்றும் பிரதமர்:     


சமீபகாலமாக இந்தியாவில் காலிஸ்தான் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. சமீபத்தில், தலைநகர் டெல்லியில் இதுபோன்ற பல சம்பவங்கள் நடந்துள்ளன, டெல்லி மெட்ரோ உட்பட பல இடங்களில் காலிஸ்தானுக்கு ஆதரவாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. இதையெல்லாம் கருத்தில் கொண்டு டெல்லி போலீசார் சுதந்திர தினத்தை முன்னிட்டு உஷார்படுத்தப்பட்டுள்ளனர். இந்தியா தனது 70வது சுதந்திர தினத்தை கொண்டாடி வரும் நிலையில், டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடியை ஏற்றி வைக்கிறார். இதற்காக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.


காலிஸ்தானியர் கைது:


சமீபத்தில் கலிஸ்தான் பயங்கரவாதி லக்பீர் சிங்கின் கூட்டாளிகள் 3 பேரை போலீசார் கைது செய்தனர். போலீசாரால் கைது செய்யப்பட்டவர்கள் மிரட்டி பணம் பறித்தல், பாகிஸ்தானில் இருந்து வரும் ஆயுதங்கள், போதைப்பொருள் மற்றும் பிற குற்றங்களில் ஈடுபட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட மூவருக்கும் கனடாவை சேர்ந்த பயங்கரவாதி லக்பீர் லாண்டாவுடன் தொடர்பு இருப்பதாக பஞ்சாப் டிஜிபி கவுரவ் யாதவ் கூறியிருந்தார். குற்றம் சாட்டப்பட்ட மூவரும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றம் மற்றும் மிரட்டி பணம் பறித்தல் போன்ற பெரிய தொடர்புகளை நடத்தி வந்தனர். அனைத்து உண்மைகளையும் விசாரித்த ஜலந்தர் போலீசார் அவர்களை பொறி வைத்து கைது செய்தனர்.


இந்நிலையில், சுதந்திர தினத்தன்று, காலிஸ்தான் அமைப்பின் சதி திட்டம் இருக்கும் என உளவு அமைப்பிடம் இருந்து, காவல்துறையினருக்கு தகவல் கிடைத்ததையடுத்து, டெல்லி காவல்துறையினர், பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர். மேலும் , சோதனைகளையும் விரிவுப்படுத்தியுள்ளனர்.