அதிகாலை சுமார் 2 மணி அளவில் கேரளம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவால்,90க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும், 100க்கும் மேற்பட்டோர் மீட்கபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் தெரிக்கின்றன.

 தீடீரென நிலச்சரிவு ஏன் ஏற்பட்டது? மீட்பு பணிகள் எப்படி நடைபெறுகிறது? மத்திய - மாநில அரசு என்ன நடவடிக்கை எடுத்து வருகிறது மற்றும் இதுபோன்ற நிகழ்வு கேரளாவில் அடிக்கடி நிகழ்வது ஏன் என்று குறித்து விரிவாக காண்போம். 

என்ன நடந்தது? 

இந்தியாவில் சுற்றுலாத்தளங்களில் மிகவும் புகழ்பெற்ற மாநிலமாக கேரளா விளங்குகிறது. அந்த மாநிலத்தின் புகழ்பெற்ற சுற்றுலா நகரமாக வயநாடு திகழ்கிறது. அதற்கு காரணம் , அங்கு இருக்கும் மலைகள் , நீர்வீழ்ச்சிகள் உள்ளிட்ட இயற்கை அமைவாகும்.

இங்கு, நேற்று கனமழை கொட்டி தீர்த்தது. இதையடுத்து, இன்று அதிகாலை சுமார் 2 மணி அளவில்  நிலச்சரிவு ஏற்பட்டதாக தகவல் தெரிவிக்கின்றன. 3 இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. வயநாட்டின் முண்டகை, மேப்பாடி மற்றும் சூரல்மலை அருகே நிலச்சரிவு ஏற்பட்டதாக தகவல் தெரிவிக்கின்றன. இதனால் மேப்பாடி, சூரல்மலை, முண்டகை உள்ளிட்ட பல இடங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

இந்த எதிர்பாராத துயரச்சம்பவத்தால், தற்போதுவரை 90 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன. மேலும் 100க்கும் மேற்பட்டோர் மருத்துமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

.

நிவாரணம்: