கேரளாவின் திருச்சூர் மாவட்டத்தில் 16 வயது சிறுமியை அவளது தந்தையின் நண்பர்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


கேரளாவின் திருச்சூர் மாவட்டத்தை சேர்ந்த 16 வயது சிறுமி, தினந்தோறும் பள்ளிக்கு வந்து சோர்வாக இருந்துள்ளார். தினமும் இந்த மாணவி சோர்வாக இருப்பதை பார்த்து சந்தேகித்த ஆசிரியர் ஒருவர், உனக்கு என்ன ஆச்சு என்று கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு அந்த மாணவி தனக்கு உடல்நிலை சரியில்லை என்று தெரிவித்துள்ளார். 


இதையடுத்து, அந்த மாணவியை மருத்துவமனைக்கு அழைத்து சென்று மருத்துவரிடம் காண்பிக்கவே, மாணவியை பரிசோதித்த மருத்துவர்கள் வன்கொடுமை செய்யபட்டதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். தொடர்ந்து அந்த மாணவியை அழைத்து வந்த ஆசிரியர்களிடமும் இதுகுறித்து தகவல் தெரிவித்துள்ளனர். 


அந்த மாணவியிடம் தனியாக ஆசிரியர்கள் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல் வெளியானது. அதில், அவர் தனது தந்தையின் நண்பர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார். இதைத் தொடர்ந்து, சிறுமியின் ஆசிரியர்கள் குழந்தை உதவி மைய அதிகாரிகளிடம் புகார் அளித்தனர். அவர்கள் உள்ளூர் காவல்துறையை அணுகி நடந்த விஷயத்தை தெரிவித்துள்ளனர். 


அவரது வாக்குமூலத்தின் அடிப்படையில், 15 வயது சிறுமியை மேலும் இருவருடன் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்த 26 வயதான ஷாஜியை போலீசார் கைது செய்தனர். இரண்டு மாதங்களுக்கு முன்பு, அந்த மாணவியின் தந்தை கஞ்சா விற்பனை செய்து காவல் துறையால் கைதாகியுள்ளார். 


இதனால் மாணவியின் தந்தையை ஜாமீனில் எடுக்க அவரது தாயார் முயற்சி செய்துள்ளார். ஜாமீன் தொடர்பாக மாணவியின் தாயார் அடிக்கடி நீதிமன்றம், காவல் நிலையம் செல்ல இருந்ததால் கணவரின் நண்பர்கள் மூன்று பேரிடம் மகளை பார்த்து கொள்ளுமாறு சொல்லியுள்ளார். 


இதை பயன்படுத்தி கொண்ட அந்த மூன்று பேரும் அந்த மாணவியை தினந்தோறும் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதை வெளியில் சொன்னால் உன்னையும், உன் குடும்பத்தை கொன்றுவிடுவதாக மிரட்டியுள்ளார். இதனால் பயந்துபோன சிறுமி இதுகுறித்து யாரிடமும் தகவல் தெரிவிக்கவில்லை. 


ஏற்கனவே முக்கிய குற்றவாளியான ஷாஜி கைது செய்யப்பட்ட நிலையில் மேலும் இருவரை போலீஸார் தேடி வருகின்றனர்.


போக்சோ சட்டம் : 


கடந்த சில ஆண்டுக்களாக 16 வயதுக்குட்பட்ட சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. தினந்தோறும் இதுபோன்ற செய்திகள் சமூக ஊடங்கள் வாயிலாகவும், தொலைக்காட்சிகள் வாயிலாகவும் நாம் காதுகளில் வந்து தஞ்சமடைக்கின்றது. இத்தகைய கொடுமைகள் இனி எந்தவொரு சிறுமிகளுக்கும் நடைபெற கூடாது எனவும், பொதுமக்கள் கடுமையான சட்டம் கொண்டு வரப்பட வேண்டும் எனவும் கருத்து தெரிவித்து வருகின்றனர். 


இதுபோன்ற தவறு செய்பவர்களுக்கு காவல்துறையினரால் போக்சோ சட்டம் பதியப்பட்டு கைது செய்யப்படுகின்றனர். இந்த நிலையில், போக்சோ சட்டம் என்ன என்பது பற்றி இங்கு தெரிந்து கொள்வோம்.


18 வயதிற்குட்பட்ட ஆண், பெண் குழந்தைகளை பாதுகாக்கப்படுபதற்கு கொண்டுவரப்பட்டதே இந்த போக்சோ சட்டம். இந்த சட்டம் எந்த அளவிற்கு பாதுகாப்பானது. இதன் சட்டம் மற்றும் ஷரத்துகள் பின்வருமாறு : 



  • Penetrative sexual Assault - பலவந்தமான பாலியல் வன்கொடுமை செய்தல்

  • Aggravated penetrative sexual assault - தீவிரமான ஊடுருவும் பாலியல் தாக்குதல்

  • Sexual Assault - பாலியல் தொல்லை

  • Aggravated Sexual Assault - எல்லைமீறிய பாலியல் தொல்லை

  • Sexual Harassment - பாலியல் தொந்தரவு

  • Taking pornographic pictures of children - குழந்தைகளை வைத்து ஆபாச படம் எடுத்தல்


இந்த ஆறுவகை பாலியல் குற்றங்களும் இந்த போக்சோ சட்டத்தின் கீழ் வருகின்றனர்.



  • 18 வயதிற்குட்பட்ட குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்தால் 7 ஆண்டு முதல் ஆயுள் தண்டனை 
    இதே குற்றத்தை பெற்றோர், பாதுகாவலர் செய்தால் 10 ஆண்டுகள் சிறை

  • 12 வயதிற்கு கீழான குழந்தைகளை வன்கொடுமை செய்தால் - மரண தண்டனை (இந்த சட்டம் 2018ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது)


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண