உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடுகளில் ஒன்றான இந்தியா தனது 75வது சுதந்திர தினத்தை (நாளை) ஆகஸ்ட் 15ஆம் தேதி கொண்டாட இருக்கிறது. இருநூறு ஆண்டுகால ஆங்கிலேயர்களின் அடக்குமுறை மற்றும் ஒடுக்குமுறைக்குப் பிறகு இந்தியா காலனித்துவ ஆட்சியிலிருந்து சுதந்திரம் பெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த நாளை நாடுமுழுவதும் கொண்டாடி வருகிறது. 


நாட்டின் 75ஆவது சுதந்திர தினத்தை ’விடுதலையின் அமிர்த மஹோத்ஸவ்’ என்ற பெயரில் மத்திய அரசு பல்வேறு கொண்டாட்டங்களை முன்னெடுத்து கொண்டாடி வருகிறது. பல்வேறு விழாக்கள், நிகழ்ச்சிகளை மத்திய அரசு கடந்த ஓராண்டாக நிகழ்த்தி வருகிறது. இதையடுத்து, 75ஆவது சுதந்திர தினத்தையொட்டி ஆகஸ்ட் 13ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை அனைவரது வீடுகளிலும் இல்லந்தோறும் தேசியக் கொடியை ஏற்றுமாறு மத்திய அரசு வேண்டுகோள் விடுத்தது.


அதன் அடிப்படையில், நாடுமுழுவதும் உள்ள மக்கள் தேசப்பற்றை வெளிப்படுத்தும் விதமாக தங்களது வீடு மற்றும் அலுவலங்களில் தேசிய கொடியை ஏற்றி சுதந்திர தின விழாவை கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில், சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்திய மக்கள் எப்படி கொண்டாடுகிறார்கள் என்பதை கீழே காணலாம்.






















நடிகர்கள், கிரிக்கெட் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு வீரர்கள், திரைப் பிரபலங்கள் எனப் பலரும் தங்கள் முகப்பு படங்களிலும், கவர் ஃபோட்டோக்களிலும் தேசியக்கொடியை வைத்து சுதந்திர விழா தினத்துக்கு ஆயத்தமாகி வரும் நிலையில், நாட்டு மக்களும் தங்கள் வீடுகளில் தேசியக் கொடி ஏற்றியும், சமூக வலைதளங்களில் வாழ்த்துகளைப் பகிர்ந்தும் வருவது குறிப்பிடத்தக்கது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண