ஐஐடி டெல்லி ஒரு மொபைல் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது, இதன் மூலம் தேசிய தலைநகரில் வசிப்பவர்கள் நிகழ்நேரத்தில் வெள்ளம் குறித்து புகார்களை தெரிவிக்கலாம், இது நகர்ப்புற வெள்ளத்தை முன்னறிவிப்பதற்கான ஆரம்ப எச்சரிக்கை அமைப்பை ஆராய்ச்சியாளர்களுக்கு உருவாக்க உதவுகிறது.


நீர் பாதுகாப்பு மற்றும் நிலையான வளர்ச்சிக்கான சவால்களைச் சமாளிக்கும் நோக்கத்தில் சிவில் இன்ஜினியரிங் துறையின் நீர் பாதுகாப்பு மையத் திட்டத்தின் ஒரு பகுதியாக உருவாக்கப்பட்ட IITD Aab Prahari என்ற இந்த செயலி இப்போது கூகுள் பிளே ஸ்டோரில் கிடைக்கிறது.


பயன்பாட்டின் மூலம், சமூகங்களும் தனிநபர்களும் தங்கள் சுற்றுப்புறங்களில் வெள்ளம் குறித்து புகாரளிக்கலாம். இவ்வாறு பயன்பாட்டிற்கு அளிக்கப்படும் தகவல் நீர் பாதுகாப்பு மையத்தில் உள்ள ஆராய்ச்சியாளர்களுக்குச் செல்லும். உள்ளூர் நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க உதவுவதே இதன் நோக்கம். "மொபைல் பயன்பாடு குடிமக்கள் அறிவியல் அணுகுமுறையைப் பயன்படுத்த உதவுகிறது. இந்த மொபைல் செயலியானது சமூகங்கள் மற்றும் அரசாங்கங்கள் வெள்ளத்தை எதிர்கொள்ளும் விதத்தை மாற்றும்,” என்று திட்டத்திற்கான முதன்மை ஆராய்ச்சியாளர் பேராசிரியர் ஏ கே கோசைன் கூறினார். இந்த செயலியை டெல்லிக்கு பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஐஐடி டெல்லியில் உள்ள அப்டேட் மற்றும் தொழில்நுட்ப பரிமாற்றத்திற்கான அறக்கட்டளை மற்றும் இங்கிலாந்து ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்பு நிறுவனம் ஆகியவற்றுக்கு இடையேயான சர்வதேச ஒத்துழைப்பின் ஒரு பகுதியாக இந்த திட்டம் உருவாகி உள்ளது.


"இந்த திட்டத்தின் மூலம், ஒருங்கிணைந்த அணுகுமுறையைப் பயன்படுத்தி நீர் ஆதாரங்களைத் திட்டமிடுதல், கண்காணித்தல் மற்றும் மதிப்பிடுதல் ஆகியவற்றிற்காக ஹப் மற்றும் பிற பங்குதாரர்களுடன் இணைந்து கணினி கட்டமைப்பை உருவாக்குவதில் நாங்கள் ஈடுபட்டுள்ளோம்" என்று ஹப்பின் முதன்மை ஆய்வாளர் பேராசிரியர் தன்யா சி டி கூறினார்.


 


முன்னதாக,


பாகிஸ்தானில் இந்த கோடையில் ஏற்பட்ட கடுமையான மழை மற்றும் வெள்ளத்தால் கடந்த ஜூன் மாதத்தில் இருந்து 326 குழந்தைகள் உள்பட குறைந்தது 903 பேர் இறந்துள்ளதாக அந்நாட்டு காலநிலை மாற்ற அமைச்சர் ஷெர்ரி ரகுமான் அதிர்ச்சிகர தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். மேலும், தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக இதுவரை சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 




கடந்த 10 ஆண்டுகளில் ஏற்பட்ட மிக மோசமான பருவமழையால் பாகிஸ்தானின் பாதி நகரங்கள் வெள்ளத்தில் மூழ்கடிக்கப்பட்டுள்ளது. இதுவரை 900 மனித உயிர்கள் மற்றும் 10 லட்சம் கால்நடைகள் பலியாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும்,  ஆயிரக்கணக்கான வீடுகள் மற்றும் லட்சக்கணக்கான ஏக்கர் பயிர்களை இந்த கனமழை மற்றும் வெள்ளம் சேதப்படுத்தியுள்ளது.


2010ல் மழையினால் ஏற்பட்ட சேதங்கள் மற்றும் உயிரிழப்புகளை விட இந்த ஆண்டு திடீர் வெள்ளத்தால் ஏற்பட்ட அழிவுகள் மிக அதிகம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.  தென்மேற்கு பலுசிஸ்தான், சிந்து, தெற்கு பஞ்சாப் மற்றும் வடக்குப் பகுதிகள் ஆயிரக்கணக்கான மக்கள் உண்ண உணவு மற்றும் தங்குமிடம் இல்லாமல் தவித்து வருவதாகவும் தெரிகிறது.


காலநிலை மாற்றத்திற்கான அமைச்சர் ஷெர்ரி ரெஹ்மான், "ஜூன் முதல், 326 குழந்தைகள் மற்றும் 191 பெண்கள் உட்பட 903 பேர் பல்வேறு பருவமழை மற்றும் வெள்ளத்தில் இறந்துள்ளனர். இறப்புகள் தவிர, 1,300 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 


மேலும், ”நிதியுதவி மற்றும் பாதிக்கப்பட்ட பகுதிகளை புனரமைப்பு முயற்சிகள் பணமில்லா பாகிஸ்தானுக்கு ஒரு சவாலாக இருக்கிறது.  முடிந்தவரை செலவினங்களைக் குறைக்க வேண்டும். இது பிரிவினைக்கான நேரம் அல்ல, ஒற்றுமைக்கான நேரம். நாம் அனைவரும் ஒன்றினைந்து இந்த இக்கட்டான சூழ்நிலையை சமாளிக்க வேண்டும். அனைவரும் ஒன்றுபட்டு நின்று வெல்வோம். 


இந்த காலநிலை பேரழிவின் அளவை மாகாணங்கள் அல்லது இஸ்லாமாபாத் தாங்களாகவே சமாளிக்க முடியும் என்பதில் எந்த கேள்வியும் இல்லை. இருப்பினும் பல உயிர்கள் ஆபத்தில் உள்ளது. ஆயிரக்கணக்கான வீடற்றவர்களாக உள்ளனர். இதை சரிசெய்ய சர்வதேச நாடுகளிடம் இருந்து உதவியை பெற வேண்டும்” என்றும் தெரிவித்தார்.