ராஜஸ்தான் மாநிலம் ஜெயசால்மரில் இந்திய விமானப்படையின் மிக்-21 போர் விமானம் விபத்துக்குள்ளானது. 

 

 

இதுகுறித்து, இந்திய விமானப்படை வெளியிட்ட ட்விட்டர் குறிப்பில்,  இன்று (24.12.2021) இரவு 8.30 மணியளவில் இந்திய விமானப்படையின் மிக்-19 விமானம், பயிற்சியின் போது ஜெய்சால்மர் விமான தளத்திற்கு அருகே விபத்துக்குள்ளானது. இந்த விபத்து குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 

முன்னதாக, தமிழகத்தின் குன்னூர் அருகே இந்திய விமானப்படையின் 
எம்.ஐ-17 வி-5 ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான சம்பவத்தில், முப்படை தலைமை தளபதி ஜெனரல் பிபின் ராவத், அவருடன் பயணித்த 12 படை வீரர்களும் உயிரிழந்த சம்பவம் பலரையும் அதிர்சிக்குள்ளாக்கியது. 

கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் இந்திய விமானப்படையின் ஏழு போர் விமானங்கள் விபத்துக்குள்ளாகியதாக பாதுகாப்பு இணை அமைச்சர்  அஜய் பட் முன்னதாக மக்களவையில் தெரிவித்தார்.         

கடந்த 2014ம் ஆண்டு முதல் 2019 வரை விமானப்படை விமானங்கள் விபத்து தொடர்பான விவரங்கள்:         

 விமானங்கள் வகை 

நிதியாண்டு 

போர் விமானங்கள் 

ஹெலிகாப்டர் 

பயிற்சி  வாகனம் 

போக்குவரத்து வாகன 

 

2014-15

07

01

02

01

 

2015-16

04

01

01

-

 

2016-17

06

02

01

01

 

2017-18

02

-

03

-

 

2018-19

07

02

02

-

 

2019-20

-

-

-

01