பீகார் மாநிலத்தில் கடுமையான மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், அங்கு மழை நீரில் சிக்கியிருக்கும் மக்களுக்கு உதவிகளை வழங்குவதற்காக, இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டரானது களத்தில் இறங்கியது .


அப்போது பீகாரின் முசாபர்பூர் மாவட்டத்தில் வெள்ள நிவாரணப் பணிகளின் போது இந்திய விமானப் படைக்குச் சொந்தமான ஹெலிகாப்டர் அவசரமாக வெள்ள நீருக்குள் தரையிறங்கியது.அப்போது, ஹெலிகாப்டரில் இரண்டு விமானிகள் உட்பட மூன்று பணியாளர்கள் இருந்தனர் என்றும், அவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாகவும் தகவல் தெரிவிக்கின்றன.