தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ளது புகழ்பெற்ற பாலபூர் கணேஷ் ஆலயம். இங்கு ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தியின் ஒரு பகுதியாக  கணேஷ் நிமஜ்ஜன் யாத்திரை என்ற வழிபாடு நடத்துவது வழக்கம். இந்த வழிபாட்டின் போது  கணபதிக்கு அதிக எடையிலான லட்டு படைக்கப்படுவது வழக்கம். தூய நெய் மற்றும் உலர்ந்த சுத்தமான பழங்களால் செய்யப்பட்ட லட்டுவின் மேல் தங்க முலாம் பூசப்பட்டு,  கடவுள் முன்னிலையில் வெள்ளி கிண்ணம் ஒன்றில் வைப்பார்களாம். அதன் பிறகு  கடவுளுக்கு படைக்கப்படும் லட்டுவை பொதுவெளியில் ஏலமிடுவார்கள் ஒவ்வொரு ஆண்டும் ஏலத்தில் பங்கேற்பவர்கள் ஒரு புறம் இருந்தாலும், லட்டு யாருக்கு கிடைக்கிறது என்பதை பார்ப்பதற்காகவே கூட்டம் கூடுகிறது. அந்த லட்டுவின் ஆரம்ப விலையானது நூற்றுக்கணக்கில் தொடங்கி பின்னர் லட்சக்கணக்கில் முடிவடைவது வழக்கம் . அந்த வகையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைப்பெற்ற கணேஷ் நிமஜ்ஜன் யாத்திரை விழாவில், 21 கிலோ எடையிலான  தங்க மூலாம் பூசப்பட்ட லட்டு ஏலமிடப்பட்டது. 





இறுதியில் லட்டுவை ஆந்தி மாநிலம்  எம்எல்எ ரமேஷ் யாதவ் மற்றும் அபாகஸ் என்னும் தனியா கல்வி நிறுவனத்தின், நிறுவன தலைவர்  மர்ரி ஷஷாங்க் ரெட்டி ஆகிய இருவரால்  வெற்றிகரமாக ஏலம் எடுக்கப்பட்டது. இதனை ரூ .18.9 லட்சத்திற்கு இருவரும் ஏலம் எடுத்துள்ளனர். இம்முறை லட்டுக்கான ஏலம் ரூ .1,116 இல் தொடங்கியுள்ளது. இந்த லட்டுவை சாப்பிடுவதால் கடவுளின் ஆசீர்வாதம் நேரடியாக கிடைக்கும் என்பது அப்பகுதி மக்களின் நம்பிக்கை. நாளடைவில் லட்டுவை ஏலத்தில் பெறுவதென்பது பணக்காரர்களுக்கு கவுரவம் என்றாகிவிட்டது. எனவே ஏலத்தின் போது கடுமையான போட்டா போட்டி நிலவுவது வழக்கம் என்கின்றனர் அப்பகுதி மக்கள். ஏலத்தில் பெற்ற லட்டுவை முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு கொடுக்கவுள்ளாராம் எம்.எல்.ஏ ரமேஷ் யாதவ்.




1994 ஆம் ஆண்டு முதலே பாலப்பூர் கணேஷ் ஆலயத்தில் லட்டு திருவிழா நடைமுறையில் இருந்து வருகிறது. கிட்டத்தட்ட 26 ஆண்டுகளாக நடைப்பெற்று வரும் இந்த  லட்டு ஏலம் மூலம் கோவில் நிர்வாகத்திற்கு வரும் வருவாயை அப்பகுதியின் மேம்பாட்டிற்காக பயன்படுத்துவார்களாம். கடந்த ஆண்டு கொரோனா தாக்கம் காரணமாக நாடு முழுவது ஊரடங்கு அமலில் இருந்ததால் கோவில் திருவிழாக்கள் நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இதன் காரணமாக கடந்த ஆண்டு லட்டு திருவிழா நடத்தப்படவில்லை. கடந்த 2019 ஆம் ஆண்டு நடைப்பெற்ற திருவிழாவில் பாலாப்பூரை சேர்ந்த கோலன் ராம் ரெட்டி என்பவர் ரூ .17.60 லட்சத்திற்கு வெற்றிகரமாக லட்டு ஏலம் எடுத்துள்ளார். ஏலம் எடுத்து முடிக்கப்பட்ட பிறகு விநாயகர் சதுர்த்தி அன்று புதிதாக அமைத்து வழிபட்ட விநாயகர் சிலையானது ஆற்றில் கரைக்க எடுத்துச்செல்லப்படுமாம்.