தமிழ்நாடு:



  • ஈசிஆர் 2 வழிச்சாலை பணிகள் 2024ல் முடியும் - நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தகவல்

  • தமிழ்நாட்டில் உள்ள 16 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு அரசு உத்தரவிட்டுள்ளது. 

  • கரூரில் நேற்று மாவட்ட ஆட்சியர் தலைமையில் சட்டம்-ஒழுங்கு மற்றும் சாலை பாதுகாப்பு குழு கூட்டம் நடைபெற்றது.

  • கல்லூரிகளில்‌ உள்ள உதவிப்‌ பேராசிரியர்கள்‌ காலிப் பணியிடங்களை நிரப்ப ஏற்கனவே அறிவிக்கப்பட்டஅறிவிக்கை ரத்து  செய்யப்படுவதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. 

  • தமிழக கோயில்களில் செல்போன்களுக்கு தடை - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

  • தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

  • கோடநாடு கொலை வழக்கு நீலகிரி நீதிமன்றத்தில் மீண்டும் இன்று விசாரணைக்கு வந்தது, விசாரணைக்கு பின் ஜனவரி 27ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

  • ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு வங்கிக்கணக்கு அவசியம்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு

  • “ஓராயிரம் ஸ்டாலின் வந்தாலும் அதிமுக வளர்ச்சியை தடுக்க முடியாது” - இபிஎஸ் ஆவேச பேச்சு


இந்தியா:



  • ஸ்பைஸ்ஜெட் (SG-036) விமானம் சவூதி அரேபியாவின் ஜெட்டாவிலிருந்து கோழிக்கோடுக்கு 6 பணியாளர்கள் உட்பட 197 பயணிகளுடன் வந்தது. ஹைட்ராலிக் கோளாறு காரணமாக கொச்சி சர்வதேச விமான நிலையத்தில்  அவசர அவசரமாகத் தரையிறக்கப்பட்டது.

  • சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகேலின் துணைச் செயலாளர் சௌமியா சௌராசியா, அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு 4 நாள்கள் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

  • புதிய பாம்பன் பாலத்தின் 84% கட்டுமான பணிகள் நிறைவடைந்துள்ளதாக மத்திய ரயில்வே அமைச்சகம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. விரைவில் இந்த பாலம் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

  • மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய விருதுகள் - குடியரசு தலைவர் திரௌபதி முர்மு இன்று வழங்குகிறார்.

  • நாடாளுமன்ற குளிர்கால கூட்டம்; காங்கிரஸ் மூத்த தலைவர்கள் இன்று ஆலோசனை 


உலகம்:



  • இஸ்ரேல் பாதுகாப்பு படை வீரர் மீது கத்திக்குத்து தாக்குதல் - பாலஸ்தீனியர் சுட்டுக்கொலை

  • பாகிஸ்தானுக்கு 3 பில்லியன் நிதியுதவி, கச்சா எண்ணெய் உதவி வழங்கும் சவுதி அரேபியா

  • ஜி20 அமைப்பின் தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ள இந்தியாவுக்கு அமெரிக்கா ஆதரவு

  • செனகல் நாட்டு நாடாளுமன்றத்தில் பெண் எம்.பி.யை கன்னத்தில் அறைந்ததால் பரபரப்பு


விளையாட்டு:



  • கால்பந்தாட்ட உலகக் கோப்பை தொடரின் லீக் போட்டியில் பலம் வாய்ந்த போர்ச்சுகல் அணியை, தென்கொரியா வீழ்த்தி நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

  • உலகக் கோப்பை கால்பந்து 2022: செர்பியா அணியை 2-3 என்ற கோல் கணக்கில் வென்றது சுவிச்சர்லாந்து

  • உலகக் கோப்பை கால்பந்து 2022: பிரேசில் அணியை 0- 1 என்ற கோல் கணக்கில் வென்றது கமரூன் அணி