Headlines Today in Tamil 30 August: 


* கிருஷ்ண ஜெயந்தி பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. வடமாநிலங்களில் உள்ள கோயில்களில் பக்தர்கள் சிறப்பு தரிசனம் செய்தனர்.


* விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே குழந்தையை தாக்கிய கொடூர தாயை ஆந்திராவுக்கு தேடிச் சென்று கைது செய்து போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.


* கள்ளக்குறிச்சி அருகே அரசுப் பேருந்துடன் கார் நேருக்கு நேர் மோதியதில் சென்னை தாம்பரத்தை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 6 பேர் உயிரிழந்தனர். பேருந்தில் பயணித்த 35 பேர் படுகாயம் அடைந்தனர்.


* செப்டம்பர் 1ஆம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட உள்ள நிலையில் சுகாதாரத்துறை, காவல் துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொள்கிறார். பள்ளி, கல்லூரிகள் திறப்பு தொடர்பான முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடைபெறுகிறது.


* டோக்கியோ பாராலிம்பிக் டேபிள் டென்னிஸ் இறுதிப்போட்டியில் இந்தியாவின் பவினா பென் பட்டேல் வெள்ளிப்பதக்கம் வென்றார். இதேபோல், டி47உயரம் தாண்டுதல் போட்டியில் இந்திய வீரர் நிஷாத் குமாரும் வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார்.


* சிவகங்கை அருகே குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் கிராம மக்களுக்கு மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்தார்.


* கடந்த நான்கு நாட்களுக்கு பின் கேரளாவில் கொரோனா பாதிப்பு 30,000க்கும் கீழ் குறைந்துள்ளது. 


* ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் பகுதியில் மீண்டும் குண்டி வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. மீண்டும் தாக்குதல் நடக்கலாம் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரிக்கை விடுத்த நிலையில் குண்டிவெடித்தது.


* சென்னையில் வாடகைக்கு வீடு அளிக்கும் உரிமையாளர்கள் தங்களது வீட்டில் குடியிருப்பவர்களின் விவரங்களை வரும் அக்டோபர் 26-ந் தேதிக்குள் காவல் நிலையத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.


* மேற்கு வங்க முதலமைச்சரும் திரிணாமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜியைக் கொன்றுவிடுவதாக சமூக வலைதளங்களில் மிரட்டல் விடுத்ததாக கொல்கத்தா பல்கலைக்கழக பேராசிரியர் மீது காவல் துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.


* மடத்திற்குள் நுழைந்தாலே நித்தியானந்தா கைது செய்யப்படுவார் என்று மதுரை ஆதீனம் பரபரப்பு பேட்டி.


* மாற்றுத் திறனாளிகளின் வாழ்வில் மாற்றத்தைக் கொண்டு வர, அவர்களின் நீண்ட காலக் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கோரிக்கை விடுத்துள்ளார். 


* சென்னையில் 5 சிறுமிகளிடம் அத்துமீறிய நபர் மற்றும் அவருக்கு உடந்தையாக இரண்டு பெண்களை போலீசார் கைது செய்தனர்.


* தமிழ்நாட்டில் நேற்று ஒரேநாளில் 1,538 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. சென்னையில் ஒரேநாளில் 189 பேருக்கு தொற்று உறுதியானது. ஒரேநாளில் கொரோனாவுக்கு 22 பேர் உயிரிழந்தனர்.


* சென்னையில் தொடர்ந்து 6ஆவது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை. நேற்றைய விலையிலேயே விற்பனை செய்யப்படுகிறது.