• தமிழ்நாடு உள்பட 10 மாநிலங்களில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு

  • கட்டுப்பாடுகளை கடுமையாக்க வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்

  • உத்தரபிரதேசம், மேற்குவங்கம், ஒடிசா, ராஜஸ்தான், பஞ்சாப் ஆகிய வட மாநிலங்களில் கனமழை – பல பகுதிகளில் வெள்ளத்தால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

  • முதுகலை மருத்துவ சேர்க்கையில் மாநில அரசு ஒதுக்கீடு விவகாரம் – மத்திய அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

  • கிருஷ்ணகிரியில் வரும் 5-ந் தேதி மக்களைத் தேடி மருத்துவம் என்ற திட்டம் தொடக்கம்

  • சென்னையில் 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் மட்டுமே உணவகங்கள் செயல்பட வேண்டும் – மாநகராட்சி உத்தரவு

  • நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடர்ந்து முடங்கியதால் ரூபாய் 133 கோடி வீண்

  • 5 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் சென்னை வந்தது

  • வேதாரண்யம் பகுதிகளில் குறுவை சாகுபடி கருகும் அபாயம் – வாய்க்கால்களில் தண்ணீர் வரவில்லை என்பதால் பரிதாபம்

  • மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்கு டிசம்பர் 15-ந் தேதி வரை தண்ணீர் திறப்பு – முதல்வர் அறிவிப்பு

  • அரசு அலுவலர்களின் திறன்களை ஊக்கப்படுத்தி சிறப்பு பயிற்சிகள்

  • தமிழ்நாட்டில் நேற்று மட்டும் 1986 பேருக்கு புதியதாக கொரோனா

  • தமிழ்நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பால் 26 பேர் உயிரிழப்பு

  • சென்னையில் மக்கள் கூடும் இடங்களில் சுழற்சி முறையில் ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை

  • அரசியலில் இருந்து முழுவதுமாக விலகுவதாக முன்னாள் பா.ஜ.க. மத்திய அமைச்சர் பாபுல் சுப்ரியோ அறிவிப்பு

  • நாடு முழுவதும் சி.பி.எஸ்.இ. 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகாத மாணவர்களின் தேர்வு முடிவுகள் ஒரு வாரத்தில் வெளியீடு – சி.பி.எஸ்.இ.

  • குடியரசுத் தலைவருடன் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நேரில் சந்திப்பு – போராடும் விவசாயிகள் மரணம் குறித்து விசாரிக்க நாடாளுமன்ற நிலைக்குழு விசாரணைக்கு உத்தரவிட மனு

  • நாட்டின் நலனே முக்கியம் என்று செயல்பட வேண்டும் – ஐ.பி.எஸ். பயிற்சி நிறைவு செய்த அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி உத்தரவு

  • தமிழ்நாட்டில் மதுபானக்கடைகளை மூட உத்தரவிட முடியாது – உயர்நீதிமன்ற மதுரை கிளை

  • ஜம்மு-காஷ்மீரில் மீண்டும் வட்டமிட்ட 2 டிரோன்கள் – சுட்டு வீழ்த்த முயற்சித்தபோது பாகிஸ்தானிற்குள் சென்று மாயம்

  • காஷ்மீரில் புல்வாமா தாக்குதலில் தொடர்புடைய 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

  • ஓடும் ரயிலில் துளையிட்டு புடவை பண்டல்கள் கொள்ளை – வடமாநில கொள்ளையன் இரண்டு ஆண்டுகளுக்கு பின் கைது

  • சென்னை ஆவடியில் தந்தை வாங்கிய கடனுக்கு மகனை கடத்திய கந்துவட்டிக்காரர்கள் 2 பேர் கைது

  • புதுச்சேரியில் 50 சதவீத பார்வையாளர்களுடன் இயங்க திரையரங்குகளுக்கு அனுமதி