• தமிழ்நாடு முழுவதும் அமலுக்கு வந்தது புதிய ஊரடங்கு விதிகள்

  • கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள 27 மாவட்டங்களில் இன்று முதல் பொதுப்போக்குவரத்து

  • 27 மாவட்டங்களுக்கு உள்ளேயேயும், மாவட்டங்களுக்கு இடையேயும் காலை முதல் பேருந்துகள் இயங்கத் தொடங்கியது.

  • பேருந்துகளில் முகக்கவசம் அணிவது, தனிநபர் இடைவெளியை பின்பற்றுவது, சானிடைசர் பயன்படுத்துவது கட்டாயம் – தமிழக அரசு.

  • குளிர்சாதன வசதி இல்லாமல் 50 சதவீத பயணிகளுடன் அரசு பேருந்துகள், விரைவு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.

  • சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் வழிபாட்டுத் தளங்களில் இன்று முதல் பக்தர்களுக்கு அனுமதி.

  • சென்னை உள்ளிட்ட 27 மாவட்டங்களில் இன்று முதல் பெரிய அளவிலான துணிக்கடைகள், நகைக்கடைகள் திறக்கப்படுகிறது.

  • சுமார் இரு மாதங்களாக மூடப்பட்டிருந்த வணிகவளாகங்களும் இன்று முதல் மீண்டும் திறக்கப்பட உள்ளது.

  • தமிழ்நாட்டில் உள்ள கடற்கரைகளில் இன்று காலை முதல் நடைபயிற்சிக்கு அனுமதி.

  • சென்னை, மெரினாவில் அதிகாலை முதல் நடைபயிற்சிக்கு மக்கள் குவிந்தனர்.

  • பொதுமக்கள், வணிகர்களின் கோரிக்கைகளின் அடிப்படையிலே தளர்வுகள் அறிவிப்பு – அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற முதல்வர் அறிவுறுத்தல்.

  • தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் 5 ஆயிரத்து 127 பேருக்கு கொரோனா உறுதி.

  • தமிழ்நாட்டில் நேற்று மட்டும் 7 ஆயிரத்து 159 பேர் கொரோனாவில் இருந்து குணம் அடைந்தனர்.

  • மாநிலம் முழுவதும் நேற்று கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 91 ஆக பதிவானது.

  • சென்னையில் 308 பேருக்கு புதியதாக கொரோனா பாதிப்பு. கோவையில் 649 பேருக்கு புதியதாக கொரோனா.

  • இன்று முதல் மாநிலம் முழுவதும் 9 ஆயிரத்து 333 பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.

  • தமிழ்நாட்டின் புதிய டி.ஜி.பி. தேர்வு குறித்து டெல்லியில் இன்று ஆலோசனை – தமிழக தலைமை செயலாளர் பங்கேற்பு

  • ஐ.சி.எம்.ஆர்., மருத்துவ வல்லுனர்கள் குழு, பெற்றோர்களின் கருத்துக்களை கேட்டறிந்த பிறகே பள்ளிகள் திறப்பது குறித்து முடிவு – அமைச்சர் அன்பில் மகேஷ்பொய்யாமொழி தகவல்.

  • தமிழ்நாட்டில் வெப்பச்சலனம் மற்றும் காற்றின் திசைவேக மாறுபாடு காரணமாக 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்

  • சென்னையில் நேற்று நள்ளிரவில் கனமழை. சென்னையில் இன்றும் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு.

  • சென்னை ஏ.டி.எம். கொள்ளை வழக்கில் தொடர்புடைய 2வது கொள்ளையன் சிறையில் அடைப்பு.

  • தொழிலதிபரை கடத்தி பணம் பறிக்க முயற்சி – காவல் உதவி ஆணையர் உள்பட 10 காவல்துறை அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு.

  • நாட்டை காக்கும் ராணுவ வீரர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும் – மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் திட்டவட்டம்.

  • தமிழ்மொழி மீது மிகப்பெரிய மதிப்பும், மரியாதையும் உள்ளது. தமிழ்மொழி மிகவும் பழமையான மொழி- பிரதமர் மோடி.

  • டெல்லியில் இன்று முதல் பல்வேறு தளர்வுகள் அமலுக்கு வந்தது.