உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் கடந்த டிசம்பர் 17 முதல் 19  வரை மூன்று நாட்கள்  நடைபெற்ற தரம் சன்சத் என்ற இந்துமத மாநாட்டில் இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்பு மற்றும் வன்முறை தூண்டும் விதமாக பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது


இந்த மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய இந்து அமைப்புகளைச் சேர்ந்த மதவாதிகள் அத்துனை பேரும் குறுகிய நோக்கில் பாரபட்சமான, அருவருக்கத்தக்க கருத்துக்களைப் பதிவு செய்துள்ளனர். இதுதொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.  இந்த மாநாட்டில், டெல்லி பாஜக முன்னாள் செய்தி தொடர்பாளர் அஷ்வினி உபதயாவும் கலந்து கொண்டிருக்கிறார்.   


ஆயதமே வெல்லும் என்று அறைகூவல் விடுத்த நரசிங்கானந்த்: 






இந்த கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய இந்துத்துவ நரசிங்கானந்த், '2029-ஆம் ஆண்டில் இந்தியாவின் பிரதமராக ஒரு இஸ்லாமியர்' என்ற கருப்பொருள்தான் இந்த மாநாட்டின் முக்கியமான விஷயம். இந்துக்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இஸ்லாமியர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அடுத்த,  ஏழெட்டு ஆண்டுகளில் சாலைகளின் நாம் பார்க்கக்கூடிய  மனிதர்களெல்லாம் இஸ்லாமியராகத்தான் இருக்கமுடியும்


2029-ஆம் ஆண்டில் இஸ்லாமியர் ஒருவர் நாட்டின் பிரதமரானால் என்ன நடக்கும்? இஸ்லாத்தின் வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால் இதற்கு பதில் கிடைக்கும். நாட்டைக் கைப்பற்றிய 20 ஆண்டுகளில் 50% இந்துக்கள் மதம் மாற்றப்படுவார்கள், 40% இந்துக்கள் கொல்லை செய்யப்படுவார்கள். எஞ்சிய 10% பேரும் அமெரிக்கா, கனடா, லண்டன், ஐரோப்பா (அ) இந்தியாவில் உள்ள ஐநா அகதிகள் முகாம்களில் தங்க வைக்கப்படுவார்கள். மடங்கள் இருக்காது, கோவில்கள் இருக்காது.  தாய்மார்களும், சகோதரிகளும் பாலியல் வல்லுறவுக்காக சந்தையில் விற்கப்படுவார்கள். 


பொருளாதார ரீதியாக ஒத்துழையாமை நடவடிக்கையை  இந்துக்கள் மேற்கொள்ள வேண்டும் என்று அறைகூவல் விடுத்த அவர், "திறமையான ஆயுதங்களை கொண்டுதான் யுத்தங்களை வெல்ல முடியும். வாள்முனையில் காரியம் சாதிக்க முடியாது.  காட்சிப்  பொருளாக வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். சிறந்த ஆயுதமே வெல்லும்” என்று பேசியுள்ளார் என தெரியவந்துள்ளது